இந்தியா
டிரைவர் வங்கிக் கணக்கில் திடீரென வந்த 9000 கோடி ரூபாய்! தூக்கத்தில் இருந்தவருக்கு வந்த குறுச்செய்தி!
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/09/Naazhikai-news-38-jpg.webp)
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த டிரைவர் ராஜ்குமார் என்பவரது வங்கிக் கணக்கில் 9000 கோடி ரூபாய் டெபாசிட் ஆன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பழனி நெய்க்காரப்பட்டி சேர்ந்த ராஜ்குமார் கோடம்பாக்கத்தில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். கடந்த செப்டம்பர் 9ஆம்திகதி காரில் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரது கைபேசிக்கு குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது.
தூக்கத்தில் இருந்தவருக்கு வந்த குறுச்செய்தி
அதில் ராஜ்குமாரின் வங்கிக் கணக்கிற்கு தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிஇல் இருந்து ரூ.9,000 கோடி டெபாசிட் ஆனதாக குறுஞ்செய்தியில் போடப்பட்டது. திகைப்பில் ஆழ்ந்த அவர் தனது வங்கிக் கணக்கில் வெறும் 15 ரூபாய் இருக்கும் நிலையில் யாரோ தன்னை ஏமாற்ற முயல்கிறார்கள் என நினைத்துள்ளார்.
அதன் பின்னர் வந்த தகவல் உண்மைதானா என அறியும் ஆவலில் தனது வங்கிக் கணக்கில் இருந்து நண்பருக்கு 21,000 பணம் அனுப்பிய பின்னர், 9 ஆயிரம் கோடி ரூபாய் பணம் தன் வங்கிக் கணக்கிற்கு வந்ததை அறிந்து பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
இந்நிலையில் நண்பருக்கு 21 ஆயிரம் ரூபாய் பணம் பகிர்ந்த உடனேயே மீதமுள்ள பணம் அனைத்தையும் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது.
எடுத்த பணத்தை திருப்பித்தர வேண்டாம்
தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் இருக்கும் தூத்துக்குடியில் இருந்து ராஜ்குமாருக்கு தொலைபேசி மூலம் அழைத்து ஒன்பதாயிரம் கோடி ரூபாய் பணம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதிலிருந்து பகிரப்பட்ட பணத்தை செலவு செய்ய வேண்டாம் என வங்கி நிர்வாகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதுடன் நிர்வாகம் தரப்பில் ராஜ்குமாரை திடீரென மிரட்ட ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் கிளைக்கு வங்கி தரப்பில் இருந்தும் டிரைவர் ராஜ்குமார் தரப்பில் இருந்தும் வழக்கறிஞர்கள் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து 9000 கோடி ரூபாய் பணத்தில் இருந்து பரிவர்த்தனை செய்யப்பட்ட 21,000 பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டாம் எனவும், அதற்கு பதிலாக வாகன கடன் வழங்குவதாக வங்கி தரப்பிலிருந்து சமரசம் பேசி அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வாடகை கார் ஓட்டுநர் வங்கிக் கணக்கில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் திடீரென டெபாசிட் ஆன சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
இந்தியா
மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/Naazhikai-7-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/Naazhikai-7-jpg.webp)
தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023) அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.
மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/01-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/01-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/02-1-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/02-1-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/03-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/03-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/04-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/04-jpg.webp)
இந்தியா
கணவனுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் மனைவிகள்! காலம் காலமாக பின்பற்றப்படும் வழக்கம்; எங்கு தெரியுமா?
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/Naazhikai-1-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/Naazhikai-1-jpg.webp)
திருமணம் என்பது ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே ஆகும். இதுவே பெரியவர்கள் கூறும் அறிவுரையும் ஆகும்.இந்நிலையில் முதல் மனைவி தங்கள் கணவர்களுக்கு இரண்டாவது திருமணம் செய்துவைக்கும் ஆச்சர்ய சம்பவம் கிராமம் ஒன்றில் கடைப்பிடிக்கபப்டு வருகின்றமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் மனைவி தனது கணவனுக்கு இரண்டாவதாக பெண் பார்த்து திருமணம் செய்து வைக்கும் விநோதமான நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.
பழமையான பழக்க வழக்கங்கள்
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில் உள்ள ராம்தேவ் கிராமத்து மக்கள் இன்னும் தங்களது பழமையான பழக்க வழக்கங்களுக்கு கட்டுப்பட்டு வாழ்கின்றனர். இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து கொள்கின்றனர்.
அத்துடன் முதல் மனைவி தனது கணவனின் இரண்டாவது மனைவியை வரவேற்கிறார். திருமணத்துக்கு தயாராவது, மணப்பெண்ணை வரவேற்பது முதல் மணமக்களின் படுக்கையை தயாரிப்பது வரை அனைத்தையும் முதலில் திருமணம் செய்து வந்த பெண்ணே செய்கிறார்.
ஒரே ஆணை திருமணம் செய்துகொள்ளும் இந்த இரண்டு பெண்களும் ஒரே குடும்பத்தில் சகோதரிகளை போல வாழ்கின்றனர். அவர்களுக்குள் சண்டையே வருவதில்லை என்று கூறுகின்றனர்.
முதல் மனைவிக்கு குழந்தை பிறக்காது
கிராம வாசிகள். இப்படி வித்தியாசமான பழக்கத்திற்கு முக்கியமான காரணம் ஒன்றையும் அவர்கள் கூறுகிறார்கள். அதாவது இந்த கிராமத்தை பொறுத்தவரை முதலில் திருமணம் செய்துகொள்ளும் பெண்ணுக்கு குழந்தை பிறக்காது என்பது ஐதீகம்.
அப்படியே குழந்தை பிறந்தாலும் அது பெண் குழந்தையாகத் தான் பிறக்குமாம். அதனால் ஒவ்வொரு ஆணும் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதாக தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் இக்கிராம மக்களின் விநோத முறை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அங்குள்ள சில இளஞர்கள் இந்த பழக்கத்திற்கு நிறுத்தவேண்டும் என வலியுறுத்தி வருகின்றார்களாம்.
இந்தியா
கமல் மீது வழக்குத் தொடரப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தப்படுமா!
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/11/naazhikai-6.png)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/11/naazhikai-6.png)
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் முறையிட்டதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் (Red card) வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா பூர்ணிமா ஜோவிகா ஐஷு ஆகியோர் கூட்டாக சேர்ந்து பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முத்திரை குத்தி பிரதீப்பை வெளியேற்றி விட்டனர் என விமர்சனம் எழுந்துள்ளது.
பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் இவ்வாரம் வெளியேற்றப்பட்டமைக் குறித்து விளக்கமளிக்காவிட்டால் அவரது அரசியல் நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திறமையான ஜோவிகா
மேலும் பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா வனிதா போன்றல்லாமல் மிகவும் திறமையாக நன்முறையில் நடந்துக்கொண்டு வருகிறார் என இரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.
எனினும் தற்போது புல்லி கேங் என சொல்லப்படும் மாயாவுடன் இணைந்து நடந்துக் கொள்ளும் விதம் இரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பேற்றி உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரதீப்பை வெளியேற்றுவதற்கான கடந்த வார எபிசோட்டில் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியபோது ஜோவிகா முதலில் குரல் எழுப்பியதால் ஜோவிகா பிரதீப் வெளியேற்றத்திற்கு பிரதான காரணமாகியுள்ளார் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆவேசமாக குரல் எழுப்பிய வனிதா
மக்களைத் தூண்டி விடுவதற்காக பொய்யான காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். என் மகள் ஜோவிகா பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசவே இல்லை. நான் வழக்கு தொடர்வேன்.
18 வயதான ஜோவிகா எதன் அடிப்படையில் பெண்களட பாதுகாப்பு என்று கூறி ரெட்கார்டு கொடுத்தீங்கன்னு கேட்டு கேஸ் போடுவாள் . இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவில்லையாயின் நான் அவதூறு வழக்கு தொடர்வேன்.
கமல் சார் தான் பெண்கள் பாதுகாப்பு என பேசினார் என வனிதா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும் பிளான் பண்ணிதான் பிரதீப்பை வெளியேற்றியுள்ளனர் என சிலர் காணொளிகளையும் பரப்பி வருகின்றனர். இதனால் என் மகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கமல் சார் மீது வழக்கு
இவ்வாரம் இதுகுறித்து கமல் சார் இவ்வாரம் பேசவில்லையாயின் கமல் சார் மீது வழக்கு தொடர்வோம். தன் மகளின் எதிரடகாலம் குறித்தும் சிந்திக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இது குறித்து இவ்வாரம் கண்டிப்பாக பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நான் சட்டம் படிக்காவிட்டாலும் சட்டம் குறித்து எனக்கு எல்லாமே தெரியும் என வனிதா தெரிவித்துள்ளார்.
அதனால் சட்டப்படி வனிதாவுக்கு விளக்கம் அளிப்பார்களா இல்லை அவதூறு வழக்கைத் தொடர்வார்களா எனத் தெரியவில்லை . இவ்வாறான நிலையை கமல்ஹாசன் பிக் பாஸ் விஜய் டீவி கூட எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
இந்தியா12 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்12 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்12 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்12 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா12 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
வாழ்க்கைமுறை12 months ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்12 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
ஆன்மீகம்11 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?