ஆன்மீகம்
மட்/குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு சக்தி விழா- 2023

மட்/குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு சக்தி விழா திருச்சடங்கு 20-10-2023 அன்று ஆரம்பமாகி 28-10-2023 அன்று திருச்சடங்கு நிறைவு பெறும் அடியார்கள் அனைவரும் வருகை தந்து அன்னையருள் பெறுக என ஆலய நிர்வாக சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.
உற்சவகால நிகழ்வுகள்
20.10.2023 – வெள்ளிக்கிழமை
காலை 108 சங்காபிஷேகம்,
பிற்பகல் 4.30 மணியளவில் கங்கா பரமேஸ்வரி திருக்குட நீர் எடுத்தல்,
மாலை 6.00 மணியளவில் அம்பாளின் திருக்கதவு திறத்தல், விநாயகர் வழிபாடு, ஊர்காவல். கும்பத்தில் அம்பாளை எழுந்தருளப்பண்ணல், விஷேட பூஜை, ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலய வலம் வருதல்,பிரசாதம் வழங்கல்.
21.10.2023 – சனிக்கிழமை
மாலை 3.00 மணியளவில் பூஜை ஆரம்பமாகி குருமண்வெளி இரு வட்டாரமும் ஊர்காவல் பண்ண அம்மன் புறப்படுதல்.
22.10.2023 – ஞாயிற்றுக்கிழமை
மதியப்பூஜை 1.00 மணியளவில் ஆரம்பமாகும்.
இரவுப்பூஜை 9.00 மணியளவில் நடைபெற்று ஶ்ரீநாகதம்பிரான், ஶ்ரீமகாவிஷ்ணு, ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயங்களுக்கு அம்பாள் சென்று திரும்புதல், பிரசாதம் வழங்குதல்.
23.10.2023 – திங்கட்கிழமை
மதியப்பூஜை 1.00 மணியளவில் ஆரம்பமாகும்.
இரவுப்பூஜை 9.00 மணியளவில் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல்.
24.10.2023 – செவ்வாய்க்கிழமை
காலை 7.00 மணியளவில் பூஜை இடம்பெற்று மடிப்பிச்சை எடுப்பதற்காக 11ம் வட்டாரம் சுற்றுதல்
இரவுப்பூஜை 9.00 மணியளவில் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல்.
25.10.2023 – புதன்கிழமை
காலை 7.00 மணியளவில் பூஜை இடம்பெற்று மடிப்பிச்சை எடுப்பதற்காக 12ம் வட்டாரம் சுற்றுதல்
இரவுப்பூஜை 9.00 மணியளவில் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல்.
26.10.2023 – வியாழக்கிழமை
மதியப்பூஜை 1.00 மணியளவில் ஆரம்பமாகும்.
இரவுப்பூஜை 9.00 மணியளவில் இடம்பெற்று பிரசாதம் வழங்குதல்.
27.10.2023 – வெள்ளிக்கிழமை
முற்பகல் 10.00 அளவில் நெல் குற்றல் (வட்டுக்குற்றல்), இரவு 9.00 மணியளவில் விநாயகபெருமானை எழுந்தருளப்பண்ணல்
வெள்ளிக்கிழமை (28.10.2023) நள்ளிரவுக்குப்பின் பேச்சியம்மனுக்கு மது வார்த்தல், கன்னிமார் எழுந்தருளப்பண்ணல், ஊர்மக்களுக்கு எந்தவித கண்டங்களும் ஏற்படக்கூடாது என்று கன்னிமார்களிடம் திருப்தி வாக்கெடுத்தல், பொங்கல் படைத்தல், பள்ளியப்பூஜை, பலி கொடுத்து தேவதைகளைத் திருப்திப்படுத்தல் கும்பம் சொபித்து தீர்த்தமாடல் அருள்வாழி பாடுதலுடன் இனிதே நிறைவுபெறும்.




ஆன்மீகம்
மார்கழி மாத குபேர அமாவாசை நாளில் இலட்சுமி கடாட்சம் பெருக செய்ய வேண்டிய பரிகாரம்!


அமாவாசை என்பது இந்துக்களின் வழிபாட்டு முறையில் மிக முக்கியமான விரத நாளாகும். எந்த நாளை தவற விட்டாலும் அமாவாசை நாளை கண்டிப்பாக தவற விடாமல் இறை வழிபாட்டையும், முன்னோர் வழிபாட்டினையும் செய்ய வேண்டும்.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைக்கு ஒரு தனிச்சிறப்பு இருப்பது போது மார்கழி மாதத்தில் வரும் அமாவாசையும் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.
மார்கழி அமாவாசை மிகவும் சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் நாம் செய்யும் பரிகாரங்கள் நமக்கு பணவரவை அதிகரிக்க செய்யும்.
கட்டுக் கட்டாக பணம் சேரா விட்டாலும், எவ்வளவு செலவு வந்தாலும் அதை சமாளிக்கக் கூடிய அளவிற்கு வரவும் வந்து கொண்டே இருக்கும்.
பொதுவாக வியாழக்கிழமையில் வரும் அமாவாசைக்கு குபேர அமாவாசை என்ற பெயர்.
மார்கழி அமாவாசை
இந்த ஆண்டிற்கான மார்கழி மாத அமாவாசை இன்றைய தினம் (11.014.2024) அனுஷ்டிக்கப்படுகிறது.
இந்த குபேர அமாவாசையில் சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்தால் குபேர யோகம் என்பது அமையும்.
அதோடு பணத்திற்கு தட்டுப்பாடு, பஞ்சம் என்பது உங்களுக்கு எப்போதும் ஏற்படாது.
கடன் சுமையும் படிப்படியாக குறையும்.
குபேர அமாவாசை
வழக்கம் போல் வீட்டை சுத்தம் செய்து, பித்ரு தர்ப்பணம் கொடுத்த பிறகு வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள்.
மாலையில் குபேர வேளை என சொல்லப்படும் 06.30 முதல் 8 மணி வரையிலான நேரத்தில் வீட்டில் விளக்கேற்றி வைத்து, 3 ஒரு ரூபாய் நாணயங்களை பூஜை அறையில் வைத்து மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
நிதி தொடர்பான உங்களின் குறைகள், பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அதை சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள்.
பணத்தை ஈர்க்கும் பரிகாரம்
பிறகு அந்த 3 ஒரு ரூபாய் நாணயங்களையும் எடுத்துக் கொள்ளுங்கள். முதல் ஒரு ரூபாயை கடுகு கொட்டி வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வையுங்கள்.
வழக்கமாக கடுகு வைத்திருக்கும் அஞ்சறை பெட்டி இல்லாமல், தனியாக ஒரு டப்பாவில் கடுகை கொட்டி, அதற்குள் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு வையுங்கள்.
கடுகிற்கு பணத்தை ஈர்க்கும் தன்மை உண்டு.
அதனாலேயே பழங்காலம் துவங்கி நம்முடைய வீடுகளில் கடுகு டப்பாவில் பணத்தை போட்டு வைக்கும் வழக்கம் இருந்து வருகிறது.
இப்படி செய்வதன் மூலம் பணம் சேர்கிறதோ இல்லையோ, பணத்திற்கு பஞ்சம் என்பது எப்போதும் ஏற்படாது.
அடுத்ததாக மற்றொரு ஒரு ரூபாய் நாணயத்தை, உங்கள் வீட்டில் உள்ள கல் உப்பு ஜாடியில் போட்டு வையுங்கள்.
கல் உப்பு இல்லா விட்டாலும் இந்த நாளில் சிறிதளவு கல் உப்பு வாங்கி ஒரு ஜாடியில் கொட்டி உங்களின் சமையல் அறையில் வையுங்கள்.
அந்த ஜாடிக்குள்ளாகவோ அல்லது ஜாடிக்கு அடியிலோ அந்த ஒரு ரூபாய் நாணயத்தை வையுங்கள்.
மூன்றாவதாக மற்றொரு ஒரு ரூபாய் நாணயத்தை உங்கள் வீட்டில் அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரத்திற்குள் போட்டு வையுங்கள்.
ஆன்மீகம்
இவ்வாண்டில் இராஜதந்திரமா செயற்படக்கூடிய இராசிக்காரங்க இவங்கதான்!


ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு இராசி அறிகுறிகளும் ஒவ்வொரு ஆளுமை பண்புகளை கொண்டிருக்கின்றன.
ஆளுமை பண்பின் அடிப்படையில், உங்களின் நடத்தைகள் மற்றும் குணநலன்கள் இருக்கும். சிலர் மிகவும் ராஜதந்திர அறிகுறிகளை பெற்றிருப்பார்கள்.
இந்த பண்பை பெற்றிருக்கும் நபர்கள், வாழ்க்கையில் சிறந்த உயரத்தை அடைவார்கள்.
2024 இல் முதல் இராஜதந்திரமாக நடந்து கொள்ளும் ராசியினர் பற்றி அறிந்துக்கொள்வோம்.
துலாம்
சமநிலை மற்றும் கவர்ச்சிக்கு பெயர் பெற்ற துலாம் இராசிக்காரர்கள் இராசியின் இராஜதந்திரிகள்.
2024 ஆம் ஆண்டில், ஒரு சூழ்நிலையின் இரு பக்கங்களையும் பார்க்கும் அவர்களின் உள்ளார்ந்த திறன் மற்றும் அவர்களின் தீவிர நீதி உணர்வு அவர்களை தனித்து நிற்கச் செய்கிறது.
பிரச்சனைகளை தீர்ப்பது அல்லது நல்லிணக்கத்தை வளர்ப்பது எதுவாக இருந்தாலும், துலாம் ராசிக்காரர்கள் இந்த ஆண்டு உங்களுக்கான ராஜதந்திரிகளாக இருப்பார்கள்.
அதனால், இவர்களிடம் சற்று கவனமாக நடந்துகொள்ளுங்கள்.
மீனம்
உணர்ச்சி ரீதியாக புத்திசாலி மற்றும் இரக்கமுள்ள, மீன ராசிக்காரர்கள் இராஜதந்திர பண்புகளுடன் இரக்கத்துடன் நடந்துகொள்வார்கள்.
2024 ஆம் ஆண்டில், அவர்களின் உள்ளுணர்வு இயல்பு அவர்களை ஆழமான மட்டத்தில் மற்றவர்களுடன் இணைக்க அனுமதிக்கிறது.
மேலும் பலதரப்பட்ட முன்னோக்குகளைப் புரிந்துகொள்வதில் அவர்களைத் திறமையாக ஆக்குகிறது.
மீன ராசியின் இராஜதந்திர திறமையை உங்களுக்கு சாதகமாகவும் பயன்படுத்தலாம்.
மிதுனம்
2024 ஆம் ஆண்டில் இராஜதந்திர சூழ்நிலைகளுக்கு பல்துறைத்திறனைக் கொண்டுவருகிறது.
அவர்களின் விரைவான புத்திசாலித்தனம் மற்றும் தங்கள் காலடியில் சிந்திக்கும் திறனுடன், மிதுன ராசிக்காரர்கள் ராஜதந்திர தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் சிறந்து விளங்குகிறார்கள்.
மிதுன ராசியின் வசீகரம் மற்றும் தகவமைப்புத் திறன் உங்கள் சொந்த இராஜதந்திரத் திறன்களை எவ்வாறு மேம்படுத்தும் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
தனுசு
இவ்வாண்டில் , தனுசு ராசிக்காரர்கள் இராஜதந்திர முயற்சிகளுக்கு தங்கள் நம்பிக்கையான மற்றும் திறந்த மனதுடன் அணுகுமுறையைக் கொண்டு வருகிறார்கள்.
சாகசம் மற்றும் கற்றல் மீதான அவர்களின் காதல் ஒரு மாறும் மற்றும் உள்ளடக்கிய இராஜதந்திர பாணியை உறுதி செய்கிறது.
தனுசு ராசியின் விரிவான உலகக் கண்ணோட்டத்தை பார்த்து, நீங்களும் இராஜதந்திரமாக இருக்க முயற்சி செய்யலாம்.
ஆன்மீகம்
தனுசு செல்லும் புதன்; அதிர்ஷடத்தில் திகழவுள்ள மூன்று இராசிக்காரர்கள்!


நவக்கிரகங்களில் பேச்சு, வணிகம், புத்திசாலித்தனம், பொருளாதாரம், படிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் புதன்.
இந்த புதன் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாவார்.
இந்த புதன் குறுகிய நாட்களில் இராசியை மாற்றினாலும், அதன் தாக்கம் அனைத்து இராசிகளிலுமே காணப்படும்.
தற்போது புதன் விருச்சிக இராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் இன்றைய தினம் (07.01.2024) புதன் தனுசு ராசிக்குள் நுழைகிறார்.
தனுசு ராசிக்குள் புதன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சியால் மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது.
குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு, நிறைய இலாபமும் கிடைக்கப் போகிறது.
மிதுனம்
மிதுன ராசியின் 7 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார்.
இதனால் திருமணமான இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
ஆயினும, உங்கள் வாழ்க்கைத் துணையின் உணர்வுகளைப் புறக்கணிக்காதீர்கள் என்று அறிவுறுத்தப்படுகிறது.
திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல பலனைப் பெறுவார்கள்.
சிலர் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்களைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் முதல் வீட்டிற்கு புதன் செல்கிறார்.
இதனால் இந்த ராசிக்காரர்களின் ஆளுமை மேம்படும்.
உங்களின் வேலைகளை திட்டமிட்டபடியே முடிப்பீர்கள்.
பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
உங்கள் வாழ்க்கைத் துணை முன்னேறலாம்.
கூட்டு தொழில் செய்ய நினைத்தால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும்.
முக்கியமாக வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 4 ஆவது வீட்டிற்கு புதன் செல்கிறார்.
இதனால் இந்த ராசிக்காரர்கள் புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் வெற்றி மேல் வெற்றி கிடைக்கும்.
பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
சிலர் ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழலாம்.
மருத்துவம், ரியல் எஸ்டேட், ஹோட்டல் தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
-
உள்ளூர்1 year ago
யாழில் கோரவிபத்து; அரச உத்தியோகஸ்தர் பலி!
-
ஆன்மீகம்1 year ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
ஆன்மீகம்1 year ago
இவ்வாண்டில் இராஜதந்திரமா செயற்படக்கூடிய இராசிக்காரங்க இவங்கதான்!
-
உள்ளூர்1 year ago
முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் பரபரப்பை ஏர்படுத்திய தீ விபத்து; ஏராளமான சொத்துக்கள் நாசம்!
-
உள்ளூர்2 years ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
இந்தியா2 years ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!