fbpx
Connect with us

ஆரோக்கியம்

இரவு படுக்கைக்கு சென்றால் துளி கூட தூக்கமில்லையா?

Published

on

With out sleep

நம்மில் சிலருக்கு இரவு நேரங்களில் தூக்கம் சரியாக வராது. இந்த பழக்கம் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவ ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்த கலியுகத்தில் வாழ வேண்டும் என்றால் நமமுடைய பழக்கவழக்கங்களை கூட மாற்றிக் கொள்ள வேண்டும்.

வேலைகள் எல்லாம் முடித்து விட்டு இரவு வெகு நேரம் விழித்திருந்து டிவி சீரியல்கள் பார்ப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்.

இவ்வாறு தூங்காமல் கேம் விளையாடுதல், கதை பார்த்தல், படம் பார்த்தல், தொலைபேசி பாவனை, கோல் கதைத்தல் ஆகிய பழக்கங்கள் காலப்போக்கில் பாரிய பிரச்சினைகளுக்கு உங்களை ஆளாக்கும்.

தூக்கமில்லையா

அந்த வகையில் இரவு நீண்ட நேரம் தூங்காமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

1.“Evening people” என்று அழைக்கப்படும் தாமதமாக தூங்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு இதய நோய், நீரிழிவு நோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றது.

2. நேரம் சென்ற பின் தூங்குதல் மற்றும் மது அருந்துதல் பழக்கம் இருந்தால் சில நேரங்களில் உயிரிழப்பு கூட ஏற்படலாம்.

3. இவ்வாறு தூங்காமல் இருந்தால் அவர்களின் உடல் ஓய்வு இல்லாமல் மயக்க நிலைக்கு கூட கொண்டு செல்லும்.

4. காலையில் அதிகாலையில் எழும்ப வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அவர்களால் செய்ய வேண்டிய வேலைகளை சரி வர செய்ய முடியாது.       

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ஆரோக்கியம்

எச்சரிக்கை : உங்கள் நுரையீரல் ரொம்ப வீக்கா இருக்கா : தெரிந்து கொள்ள சில அறிகுறிகள்!

Published

on

By

நுரையீரல் நமது உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்று நமது நுரையீரல் எவ்வளவு ஆரோக்கியமாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்  ஆனால் இன்று மாசுபட்ட சுற்றுச்சூழல் மற்றும் மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்களின் மோசமான பாதிப்புகளை நமது நுரையீரலில் காணலாம்.

புகைபிடித்தல் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை நமது நுரையீரலின் ஆரோக்கியத்தை நாளுக்கு நாள் பலவீனப்படுத்துவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்.

நுரையீரல் பலவீனத்தைக் குறிக்கும் சில அறிகுறிகள்,

நீடித்த இருமல்

உங்களுக்கு தொடர்ந்து இருமல் பிரச்சனை இருந்தால், அது நோயுற்ற நுரையீரலின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

ஏனெனில் நமது நுரையீரல் சளியை உற்பத்தி செய்து சுவாசக்குழாய்களை தொற்று நோயிலிருந்து பாதுகாக்கிறது. ஆனால், சளி அளவிற்கு அதிகமானால், இருமல் பிரச்சனை ஏற்படுகிறது.

இருமல் நீண்ட நாட்களாக நீடித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். ஏனெனில் நீண்ட நாட்களாக தொடரும் இருமல் பிரச்சனை உங்கள் நுரையீரலை படிப்படியாக பலவீனப்படுத்துகிறது.

சுவாசிப்பதில் சிரமம் 

நீங்கள் சில கடினமான வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் போது, அதனால் உங்களுக்கு சுவாசிப்பதில் ஏற்பட்டால், அது இயல்பானது.

ஆனால் சிறிய வேலைகளைச் செய்யும் போதும் கூட அல்லது எழுந்து உட்கார்ந்திருக்கும்போதும் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டால், அது உங்கள் நுரையீரலின் மோசமான நிலையைக் குறிக்கிறது.

நீண்ட நாட்களாக இந்தப் பிரச்சனை தொடர்ந்தால், அதை ஒரு எச்சரிக்கையாகக் கருதி, தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகவும்.

கவலை மற்றும் அமைதியின்மை

சிறிய விஷயங்களில் பதற்றம் அடைபவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால், அது ஆரோக்கியமற்ற நுரையீரலின் அறிகுறியாகவும் இருக்கலாம்.

அடிக்கடி உங்கள் தொண்டையில் ஏதாவது சிக்கியிருப்பதை உணர்ந்தாலோ, இருமல் தொடர்ச்சியாக ஏற்பட்டு பிரச்சனையாக இருந்தால், அது மோசமான நுரையீரலின் அறிகுறியாக இருக்கலாம்.

நெஞ்சு வலி

சில நேரங்களில் மார்பு வலி பல மாதங்கள் நீடிக்கும், இது உங்கள் நுரையீரலின் மோசமடைந்த நிலையின் அறிகுறியாகும்.

இதனுடன், இருமல் மற்றும் சுவாசிக்கும்போது இந்த வலி கணிசமாக அதிகரித்தால், உங்கள் நுரையீரல் மிகவும் மோசமான நிலையில் உள்ளது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. எனவே, தாமதிக்காமல் நல்ல மருத்துவரை அணுக வேண்டும்.

Continue Reading

ஆரோக்கியம்

உடல் எடையை குறைக்க முடிவெடுத்துள்ளீர்களா? இன்றிலிருந்து குடிக்கலாம் டீ!

Published

on

By

cup of tea

உடல் எடையை குறைக்க பலர் தற்போது உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பலர் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றி வருகின்றனர்.

அதிலும் உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க விரும்புகிறவர்கள். ஆரம்பத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் போக போக அதன் மேல் இருந்து தீவிரம் இல்லாமல் போகும்.

விரைவாக உடல் எடையை குறைக்க, சர்க்கரை, மாவுச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவைக் குறைக்க வேண்டும்.

உங்கள் தினசரி உணவில் புரதம், ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் குறைந்த கலோரி மற்றும் நிறைய ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.

இதனால் உங்கள் எடையை சீராக பராமரிக்க முடியும். எவ்வாறு உங்கள் உடல் எடையைக் குறைக்க எவ்வித உடற்பயிற்சியும் இன்றி தினமும் வெந்தய டீயை குடிக்கலாம்.

வெந்தய டீ தயாரிக்கும் முறை

ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொதிக்க வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் கொதித்து வருகின்ற போது அதில் ஒரு கரண்டி வெந்தயத்தை சேர்த்து கொதிக்க விடவும்.

தண்ணீர் கொதித்து பாதியாகும் வரைக்கும் கொதிக்க விட்டு பிறகு அந்த தண்ணீர் ஆறியது வடிகட்டி குடிக்க வேண்டும்.

இந்த தண்ணீரை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடல் எடைக் குறையும்.    

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Continue Reading

ஆரோக்கியம்

தேங்காய் எண்ணை பயன்படுத்துவதால் இவ்வளவு நன்மைகளா?

Published

on

By

சில வருடங்களுக்கு முன்னாள் வரை கற்பக விருட்சம் என நம்மால் போற்றப்பட்ட தென்னைக்கு பல எதிர்ப்புகளும் இருந்தது.

ஆனால் நம் முன்னோர்களோ இதனை அரிய காயகல்பம் என்று கூறியுள்ளனர். தொடர் விஞ்ஞான ஆய்வுகளோ தேங்காய், தேங்காய் எண்ணைப் பற்றி நல்ல பலன்கள் பற்றியும் வலியுறுத்தி வருகின்றன. சமையலுக்கு பயன்படுத்தலாம்.

உயர் வெப்பத்திலும் தீய விளைவுகளை அது ஏற்படுத்துவதில்லை. *வெளிநாடுகளில் வெண்ணைக்கு பதிலாக சில சமையல் குறிப்புகளில் தேங்காய் எண்ணையினை பயன்படுத்துகின்றனர்.

சைவ உணவு உண்பவர்கள், பாலியோ- உணவு முறையினை கடை பிடிப்பவர்கள் தேங்காய் எண்ணையினை உணவில் சேர்த்துக் கொள்கின்றனர்.

வீட்டிலேயே தேங்காய் எண்ணை கோகோ பவுடர், தேன் கொண்டு சாக்லேட் தயாரிக்கின்றனர். உணவிற்கு முன்னால் ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணை நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டும் எடுத்துக் கொள்வது பசியினை குறைப்பதாகவும், தீங்கற்றதாகவும் உள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

நினைவில் கொள்ள வேண்டியது நாள் ஒன்றுக்கு ஒருமுறை மட்டுமே. அதுவும் ஒரு டீஸ்பூன் மட்டுமே. மற்றொன்றினையும் நினைவில் கொள்ள வேண்டும். வறுத்தது, பொரித்தது, பேக்கரி உணவு என்ற கட்டுபாடின்றி சாப்பிட்டு விட்டு பிறகு ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணை எடுத்துக் கொள்வது எந்த விதத்திலும் பயன் தராது

தேங்காய் எண்ணை அட்ரினல், தைராய்டு சுரப்பிகளுக்கு நல்லது. உடலின் வளர்சிதை மாற்றங்களுக்கு உதவுவது.

சக்தி அளிக்கின்றது சர்க்கரை அளவு கட்டுப்பட உதவுகின்றது. மூளை செயல்பாட்டுத் திறன் கூர்மையாகும்.நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகின்றது.

ஜீரணத்திற்கு உதவுகின்றது. குடல் புண்களை ஆற்றும்.

பூஞ்சை தாக்குதலை தவிர்க்க பெரிதும் உதவுகின்றது.

பேன் தொல்லை நீக்கும்.

அடுப்பில் வேலை செய்யும் போது சிறிது சுட்டுக் கொண்டால் தேங்காய் எண்ணை தடவுவது வீட்டு வைத்தியமாய் உள்ளது. மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவரிடம் செல்லும் போது சிறந்த முறையில் நடந்து கொள்ள வேண்டும்.

இதனைப் படித்தவுடன் பலருக்கு பலவித ஐயங்கள் எழலாம். நாம் ஏதோ ஒரு உடல் நல பிரச்சினைக்காகவோ அல்லது வருடாந்திர முழு உடல் பரிசோதனைக்காகவோ மருத்துவரிடம் செல்கின்றோம். போகும் போது சில முறைகளை கடை பிடித்தால் செல்பவர்க்கும் நல்லது.

மருத்துவருக்கும் தேவையான பரிசோதனைகளை மட்டுமே செய்வார். செல்லும் போது உங்கள் மருத்துவ கோப்பினை எடுத்துச் செல்ல வேண்டும். உட்கொள்ளும் மருந்துகள், அலர்ஜி இருப்பின் அதனைப் பற்றிய விவரம், அடையாள அட்டை எண் இவை அவசியம்.

மாரடைப்பு சிகிச்சை, அறுவை சிகிச்சை விவரங்கள் குப்பை போல் இல்லாமல் வருட, மாத, தேதி வாரியாக இருக்க வேண்டும்.

உங்கள் பிரச்சினைகள், சந்தேகங்கள் இவற்றினை ஒரு பேப்பரில் குறிப்பு எடுத்து செல்வது நல்லது. அனைத்தையும் நம்மால் கேட்க முடியும். நேரமும் மிச்சப்படும்.

தேவைப்படின் துணைக்கு ஒருவர் இருப்பது நல்லது. மருத்துவர் ஒரு மனிதர் தான். அவருக்கும் உணவு, ஓய்வு சிறிதாவது அவசியம் என்பதனை மனதில் கொள்ள வேண்டும்.

ஒருவரை பரிசோதித்த பின் அதன் குறிப்புகளை நவீன முறைப்படி கம்ப்யூட்டரில் ஏற்ற அவருக்கும் 10 நிமிடங்கள் ஆகும். அதனை விட்டு உங்கள் வேலை மட்டுமே அவசரம் என்று பதட்டப்படக் கூடாது.

உங்கள் பிரச்சினைகளை நீண்ட நாவலாக கூற வேண்டாமே. * பாதிப்பின் அறிகுறிகளை மட்டுமே சொல்ல வேண்டும். உங்கள் சுய ஆய்வு முடிவுகளை திணிக்க வேண்டாேம.வீக்கங்கள் மீது கூட தடவுகின்றனர்.

குழந்தைகளுக்கு ‘டயபர்’ போடும் இடம் சிவக்கும் போது தேங்காய் எண்ணை தடவுவர். காய்ந்த உதடுகளுக்கு எளிதான தீர்வு சிறிது தேங்காய் எண்ணை தடவு வதுதான்.

வெயிலில் சென்று வந்த பிறகு சிறிது தேங்காய் எண்ணை தடவி குளிப்பது உடல் கருப்பதினை நீக்கும்.

தேங்காய் எண்ணை யினை சருமத்தில் அன்றாடம் தேய்த்து குளிக்க சருமம் பல நன்மைகளைப் பெறும்.

அழகு சிகிச்சை முறைகளில் தேங்காய் எண்ணையினை நன்கு உபயோகிக்கின்றனர். இப்படி பல நன்மைகளை தேங்காய் எண்ணையின் பயன்பாடாக கூறியுள்ளனர். சமையலில் பயன் படுத்தலாம் என்று கூறப்படும்போது இதன் அளவினை முக்கியமாய் அறிந்து கொள்வது அவசியம்.

பொதுவில் நாள் ஒன்றுக்கு 2-3 டீஸ்பூன் அளவு எண்ணையே பரிந்துரைக்கப்படுகின்றது. ஏனெ னில் எந்த எண்ணையும் கலோரி சத்து கொண்டது. பொதுவில் எந்த எண்ணை ஆனாலும் மொத்தத்தில் இந்த அளவே உள்ளுக்குள் போதுமானது.

தலைக்கு உடலுக்கு தேய்த்துக் கொள்ளும் போது எண்ணையினை சற்று தாராளமாக தேவையான அளவு தேய்த்து குளிக்கலாம். கணையம்: இதனை ஆங்கிலத்தில் Pancien என்பர்.

வயிற்றின் பின் புறம் இருக்கும் உறுப்பு.

இதற்கு இரண்டு வேலைகள் உள்ளது. ஒன்று ஜீரண என்ஸைம்கள், பைகார்பனேட் போன்றவற்றினை சுரந்து ஜீரணத்துக்கு உதவுகின்றது மற்றும் ஹார்மோன்களை குறிப்பாக இன்சுலின் ஹார்மோன்ஸ் சுரப்பதின் மூலம் குளுகோஸ் செல்களில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் சர்க்கரை அளவு சீராய் இருக்க உதவுகின்றது.

இப்படி இதன் வேலையினை மேலும் சற்று விரிவாக கூறலாம். ஜீரணத்திற்கு முக்கிய பங்கு கணையம் மூலம் நடைபெறுகின்றது என்பதனை உணர வேண்டும்.

இந்த கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டால் அதன் அறிகுறிகளை அலட்சியம் செய்யாது உடனடியாக அதிக கவனம் கொடுக்க வேண்டும்.

கணைய வீக்கம் இருந்தால் பொறுக்க முடியாத வலி இருக்கும். வயிற்று வலி, வயிற்று பிரட்டல், வாந்தி இருக்கும். உடனடியாக அவசர மருத்துவ சிகிச்சை அவசியம்.

சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்படலாம். கணைய புற்றுநோய் பாதிப்பும் ஏற்படலாம். வலி, காரணம் இன்றி எடை குறைதல், மஞ்சள் காமாலை இவற்றினை வீட்டு வைத்தியம் என்ற பெயரில் கவனிக்காமல் இருந்து விடக்கூடாது.

மரபணுக்கோளாறு காரணமாகவும் கணைய பாதிப்பு ஏற்படலாம்.

பொட்டாசியம்: இந்த உடலை வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாய் கொண்டு செல்வது என்பதே வாழ்வில் ஒரு சவாலான விஷயம்தான்.

இந்த எண் ஜான் உடம்பிற்கு எத்தனை எத்தனை தேவைகள் உள்ளது . வளர்சிதை மாற்றங்களுக்கு எத்தனை கவனம் கொடுக்க வேண்டி உள்ளது.

புரதம், மாவு சத்து,கொழுப்பு, வைட்டமின்கள், தாதுக்கள் என எத்தனை பிரிவு, உட்பிரிவுகளின் கீழ் ஊட்டம் கொடுக்க வேண்டி உள்ளது. அவ்வகையில் பொட்டாசியம் குறைபாடு ஏற்படும் பொழுது உடல் என்னென்ன அறிகுறிகளை காட்டுகின்றது.

பலவீனம், சோர்வு, தசை பிடிப்பு, வயிற்றில் இழுத்து பிடித்த வலி, வயிறு உப்பிசம், * மலச்சிக்கல், கை, கால்களில் குறுகுறுப்பு மற்றும் மரத்துப்போகுதல், உயர் ரத்த அழுத்தம், மனச்சோர்வு, எரிச்சல் என்ற அறிகுறிகளை காட்டும்.

இந்தக் குறைபாடு கூடும் பொழுது பக்கவாதம், இருதய பாதிப்பு, சுவாச மண்டல பாதிப்பு என ஆபத்தான பாதிப்புகளும் ஏற்படுகின்றன. ஏன் இந்த பொட்டாசியம் பாதிப்பு ஏற்படுகின்றது?

உணவில் தேவையான அளவு பொட்டாசியம் இன்மை. வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிக வியர்வை இவை காரணமாக பொட்டாசியம் இழப்பு ஏற்படலாம்.

சில மருந்துகளினால் ஏற்படும் பாதிப்பு.

சிறுநீரக பாதிப்பு, அதிக ஆல்கஹால் பழக்கம் காரணத்தினால் பொட்டாசியம் குறைபாடு ஏற்படுகிறது.

பொதுவில் உணவில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக் கொள்ளுதல்

பொட்டாசியம் சத்தினை மருத்துவர் பரிந்துரையின் பேரில் எடுத்துக் கொள்ளுதல்.

அதிக குறைபாடுகளுக்கு மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெறுதல் ஆகியவைகளை மேற்கொள்ள வேண்டும்.

கிட்னி பீன்ஸ், சர்க்கரை வள்ளி கிழங்கு, வாழைப்பழம் இவற்றினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கால் ஆடு தசை வலி :

திடீரென படுத்து இருக்கும் பொழுது உறங்கும் பொழுது கீழ் கால் பொறுக்க முடியாத அளவு வலி கொடுக்கின்றதா? தசை இறுகி கடினமாக உள்ளதா? தானாகவே பத்து நிமிடத்திற்குள் தசை இறுக்கம் நீங்குகின்றதா? இவை முதியவர்களுக்கும் பெண்களுக்கும் அதிகமாக ஏற்படுகின்ற ஒன்றாகும். இவை தொடையின் முன் பின் பகுதியிலும் ஏற்படலாம்

நன்கு நீர் குடிக்க வேண்டும். காய்கறி, ஜூஸ், சூப் போன்றவைகளும் எடுத்துக் கொள்ளலாம். இது தசைகள் நன்கு இயங்க உதவும். வயது, சீதோஷ்ண நிலை, செய்யும் வேலை, மருந்து இவைகளைக் கொண்டு திரவ அளவும் மாறுபடும்.

நிற்க வைத்த சைக்கிளில் உடற்பயிற்சி செய்யலாம்.

தூங்கச் செல்லும் முன்னால் கால்களுக்கு ஸ்ட்ரெச் பயிற்சி. பயிற்சியாளர் மூலம் ஆலோசனை பெற்று செய்யலாம்.

படுக்கை சீராய் இருக்க வேண்டும்.

நிமிர்ந்து படுத்து முட்டிக்கு கீழ் தலையணை வைத்துக் கொள்ளலாம். முறையான காலணி அவசியம்.

இந்த கால் ஆடு தசை வலி இரவில் ஏற்படும் போது அதிக கஷ்டமாக இருந்தாலும் மிக ஆபத்தானது அல்ல. இருப்பினும் மருத்துவர் ஆலோசனை என்பது எதிலும் அவசியம்.

கால்களுக்கு நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணை வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்

வலி வரும் போது காலினை நன்கு நீட்டி பாதத்தினை மேலும் கீழுமாக வளைக்க வேண்டும். இப்படி சில முறை செய்ய ஆடு தசை பிடிப்பு நீங்கும்.

குதி கால் கொண்டு சிறிது நேரம் நடக்க தசைகளின் இறுக்கம் நீங்கும்.

சாதாரண வலி நிவாரண மாத்திரை தேவைப்படின் ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.

கோணல் மானலாக உட்காருவதனை தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி, நடைபயிற்சி இரண்டும் அவசியம்.
வெகுநேரம் நிற்பதனை தவிர்க்க வேண்டும்.

நரம்பு அல்லது தசை நார் பிரச்சினை இருக்கின்றதா? என மருத்துவர் ஆலோசனை பெற வேண்டும். இப்படி கவனம் செலுத்தினால் வலியில் இருந்து எளிதில் விடுபடலாம்.

உடனடி செய்திகளுக்கு

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை