உள்ளூர்
முல்லைத்தீவில் வரலாற்று சாதனை படைத்த குமுழமுனை மகாவித்தியாலய மாணவி.!
முல்லைத்தீவு மாவட்டத்தின் குமுழமுனை மகாவித்தியாலயம் தன் முதலாவது மருத்துவ மாணவியை கண்டு கொண்டது.2022 (2023) உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்கு தோற்றிய மாணவி செழியன் தட்சாயினி மருத்துவப் பட்டப்படிப்பை மேற்கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
வைத்திய விஞ்ஞானி என்ற உச்சம் தொட எண்ணியமையே தான் வைத்தியத்துறைக்கு தேர்வாக தூண்டியது என மாணவி தட்சாயினி தெரிவித்துள்ளார்.
குமுழமுனை மகாவித்தியாலயம் கடந்த 2015 ஆம் ஆண்டு 1AB தரப் பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டது.
இதன் பின்னரே அந்த பாடசாலையில் உயர்தரம் உயிரியல் மற்றும் கணிதம் பாடப் பிரிவுகளுக்கான கற்றல் கற்பித்தல் அலகுகள் தொடங்கப்பட்டது.
அதுவரை காலமும் தமிழ் மற்றும் வணிகப் பிரிவுகளில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வசதிகளே இருந்தன.
உயர்தர உயிரியல் பிரிவு ஆரம்பமானதால் குமுழமுனை பாடசாலையின் மாணவர்கள் உயர்தர உயிரியல் பிரிவில் கல்வியைத் தொடர வாய்ப்பெட்டியது.
இதன் பின்னரே அந்த பாடசாலையில் உயர்தரம் உயிரியல் மற்றும் கணிதம் பாடப் பிரிவுகளுக்கான கற்றல் கற்பித்தல் அலகுகள் தொடங்கப்பட்டது.
அதுவரை காலமும் தமிழ் மற்றும் வணிகப் பிரிவுகளில் கற்றல் கற்பித்தலை மேற்கொள்ளும் வசதிகளே இருந்தன.
இதேவேளை “சிறந்த வைத்தியராவதுடன் தன் தாய்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். தன்னையும் மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும். வைத்திய விஞ்ஞானி என்ற உச்சத்தை தொட்டுவிட வேண்டும்” என குறிப்பிட்டார் மாணவி செ.தட்சாயினி.
மிகக் கடினமான போராட்டத்துடனேயே உயர்தர கற்பித்தலை எதிர்கொண்டு சாதனை படைத்த இந்த மாணவிக்கு நாழிகை குழுமமும் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா10 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்10 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா10 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
உள்ளூர்10 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்10 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்10 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
உள்ளூர்10 months ago
யாழில் ஆண்களுடன் தகாத உறவில் இளம் குடும்ப பெண்; பாலியல் தொற்றுள்ளாரா?
-
ஆன்மீகம்8 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?