உள்ளூர்
கடவுச்சீட்டு அலுவலகத்தில் ஈவிரக்கமின்றி தாக்கப்பட்ட புலம்பெயர் தமிழ் இளைஞன்
வவுனியா பாஸ்போட் அலுவலகத்தில் புலம்பெயர் தமிழ் இளைஞன் ஒருவன் அங்கிருந்த மாபியாக்கள் மற்றும் பொலிசாரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
தனது பாஸ்போட்டில் இருந்த சில தவறுகளை சீர்செய்வதற்காக அங்கு சென்ற குறித்த இளைஞன் பாஸ்போட் அலுவலர்களின் தவறினை சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் சினமடைந்த அலுவலர்கள் இளைஞரை பொலிசாரிடம் மாட்டிவிட்டதாகத் தெரியவருகின்றது.
ஈவிரக்கமின்றி தாக்குதல்
அத்துடன் காசு கொடுத்து பாஸ்போட் வாங்குபவர்களுடன் டீல் செய்யும் அங்குள்ள மாபியாக்களா பொலிசாரின் முன்னாலேயே குறித்த புலம்பெயர் இளைஞன் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளான்.
இளைஞன் மது போதையில் நின்று தகராறு செய்வதாக கூறியே தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த இளைஞன் எந்தத் தகராறும் செய்யாது தனக்கு இழைக்கப்பட்ட மற்றும் அங்கு வரிசையில் நிற்கும் அப்பாவிகளுக்கு இழைக்கப்படும் அநீதிளை எடுத்துக்கூறியதாக அங்கிருந்த மக்கள் கூறியுள்ளனர்.
அதேசமயம் வவுனியா பாஸ்போட் அலுவலகத்திற்கு பாஸ்போட் வாங்க வருபவர்களிடம் பொலிசாரின் ஆதரவுடன் அங்குள்ள மாபியாக்கள் ஆயிரக்கணக்கில் பணம் வசூலித்து பாஸ்போட் அலுவலர்களுடன் பகிர்ந்து கொள்வதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் பொலிஸாரின் கண் முன்னே அப்பாவி இளைஞர் தாக்கப்பட்ட சம்பவம் அங்கிருந்த மக்களை சினம் கொள்ள வைத்துள்ளது.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
உள்ளூர்1 year ago
யாழில் கோரவிபத்து; அரச உத்தியோகஸ்தர் பலி!
-
ஆன்மீகம்1 year ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்1 year ago
முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
-
ஆன்மீகம்1 year ago
இவ்வாண்டில் இராஜதந்திரமா செயற்படக்கூடிய இராசிக்காரங்க இவங்கதான்!
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் பரபரப்பை ஏர்படுத்திய தீ விபத்து; ஏராளமான சொத்துக்கள் நாசம்!