உலகம்
பிரமிக்கவைக்கும் AI டிவி செய்தி வாசிப்பாளர் லிசா; சீனாவை தொடர்ந்து இந்தியா சாதனை
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/07/Naazhikai-news-8-jpg.webp)
தற்போதைய வின்ஞான உலகில் அறிவியல் தொழில் நுட்பங்கள் ஆச்சர்யமூட்டும் வகையில் வளர்ச்சி கண்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக கம்ப்யூட்டர் சார்ந்த தொழில் நுட்பங்களின் வளர்ச்சி பிரமாண்டமானவையாக உள்ளன.
அந்தவகையில் சீனாவை தொடர்ந்து இந்தியாவிலும் பிராந்திய மொழியில் AI தொழில் நுட்பத்தில் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
AI லிசா
ஒடிசாவில் உள்ள ஓ டிவி, தனது முதல் செயற்கை நுண்ணறிவு AI டிவி செய்தி வாசிப்பாளர் லிசா எனும் வாசிப்பாளரை உருவாக்கியுள்ளது.
செயற்கை நுண்ணறிவு எனப்படும் Artificial intelligence (AI) தொழில் நுட்பத்தில் பல புதுமைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் AI லிசாவை பார்க்க அசல் செய்தி வாசிப்பாளர் போலவே உள்ளது.
ஒடிசா மாநிலத்தின் பாரம்பரிய கைத்தறி சேலையை கட்டிக்கொண்டு ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிக்கும் வகையில் லிசா புரோகிராம் செய்யப்பட்டுள்ளது. இது காட்சி ஊடகத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் பல மொழிகளில் செய்தி வாசிக்கும் திறன் லிசாவுக்கு உள்ளதாம்.
அதேவேளை சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று, AI தொழில்நுட்பம் மூலம் முதல்முறையாக செய்தி வாசிப்பாளரை அறிமுகம் செய்தது. உருவம், முக பாவனை, உதட்டு அசைவுகள் அச்சுஅசலாக மனிதர்களைப் போலவே இருக்கும்.
குரலை மட்டும் பதிவு செய்து அமைத்துக் கொள்ளும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவிலும் பிராந்திய மொழியில் AI தொழில் நுட்பத்தில் செய்தி வாசிப்பாளர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளார்.
உலகம்
கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-34-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-34-jpg.webp)
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் மோசடிகளில் சிக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
விரும்பிய தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த IMEI எண்ணைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
IMEI எண் என்பது International Mobile Equipment Identity என்பதனை குறிக்கின்றது.
இது அனைத்து கையடக்க தொலைபேசி சாதனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.
கையடக்க தொலைபேசி அட்டையில் காட்டப்படும் 15 இலக்க IMEI எண்ணை 1909 க்கு அனுப்புவதன் மூலம் IMEI எண்ணின் செல்லுபடியை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா இல்லையா என உடனடி பதில் செய்தி வரும் என குறிப்பிடப்படுகின்றது.
உலகம்
பிரித்தானியாவில் உயரிய விருது பெறும் ஈழத்தமிழர்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-33-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-33-jpg.webp)
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.
பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தொழிநுட்பத்தை உலகிலுள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா
மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/Naazhikai-7-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/Naazhikai-7-jpg.webp)
தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023) அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.
மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/01-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/01-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/02-1-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/02-1-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/03-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/03-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/04-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/04-jpg.webp)
-
இந்தியா12 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்12 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்12 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்12 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா12 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
வாழ்க்கைமுறை12 months ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்12 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
ஆன்மீகம்11 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?