fbpx
Connect with us

உள்ளூர்

கடமை நேரத்தில் அலங்கோலமாக திரியும் பொலிஸார்; தமிழர் பகுதியில் சேவை பெறச் சென்றவர்கள் விசனம்!

Published

on

Sri Lankan police

மாங்குளம்-  முறிகண்டி பொலிஸ் காவலரண் பொதுமக்கள் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுவதில்லை எனவும், சேவையை பெற்றுக் கொள்ள செல்லும் சந்தர்ப்பங்களில், கண்னியம்ற்று அநாகரீகமான அறைகுறை ஆடைகளுடன் அங்குள்ள பொலிஸ் உத்த்யோகஸ்தர்கள் நடமாடுவதாகவும் பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

குறித்த உத்தியோகத்தர்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்து, பொதுமக்களிற்கு சேவை செய்யக் கூடிய உத்தியோகத்தர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேவை பெறச்செல்லும் மக்கள் இழுத்தடிப்பு

மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்தின் கீழ் மக்களின் பாதுகாப்பு சேவையை உறுதி செய்வதற்காகவும், இலகு படுத்தலிற்காகவும் முறிகண்டியில் பொலிஸ் காவலரண் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த காவலரணில் மக்கள் முறைப்பாடுகள் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக கூறப்படுகின்றது. இன்றைய தினம் (04) பிற்பகல் 2 மணியளவில் ஒருவர் சேவை பெறுவதற்கான சென்ற பொழுது காவலரணில் எவரும் இருந்திருக்கவில்லை.

இது தொடர்பில் கிளிநொச்சி ,முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

அதோடு காவலரணில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் முறையற்ற உடையில் சாரத்துடன் இருந்ததுடன், தமிழ் உத்தியோகத்தர் ஒருவர் நீராடிவிட்டு மாற்று உடையில் இருந்துள்ளார்.

பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு

சேவைக்கு சென்ற நபர் சேவையை பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அங்கு வந்த தமிழ் உத்தியோகத்தரிடம் வினவிய போது, கடமையில் யாரும் இல்லை, தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை நாடுமாறும் கூறியுள்ளார்.

இதனையடுத்து காவலரணுக்கு பொறுப்பான அதிகாரியை சந்திக்க கோரிய போது அவ்வாறு எவரும் இல்லை எனவும், மாங்குளம் தலைமை பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் பிரதி பொலிஸ்மா அதிபரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து பிரதி பொலிஸ்மா அதிப காவலரணுக்க பொறுப்பான அதிகாரியை தொடர்பு கொண்டு விடயங்களை கேட்டறிந்ததுடன், சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பொது மக்களிற்கு சேவை வழங்க முடியாத முறிகண்டி காவலரண் தேவையற்ற ஒன்று என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.    

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

உள்ளூர்

சித்திரத் தேர் வெள்ளோட்டம்!

Published

on

By

மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது

அனைவரும் வருக… அருள்பெறுக…

-ஆலய பரிபாலானசபை

Continue Reading

உள்ளூர்

EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

Published

on

By

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Continue Reading

உள்ளூர்

மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!

Published

on

By

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.

தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.

அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை