உள்ளூர்
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழின் பயன்பாட்டை நலிவாக்கி மாற்று மொழிகளை முதன்மைப்படுத்த நினைக்கும் தமிழ் முகவர்கள் யாவர்? அவர்கள் யாருக்காத இதனைச் செய்கிறார்கள்? இந்தத் தமிழ் முகவர்கள் கடந்த மூதவைக் கூட்டம் (Senate meeting), பேரவைக் கூட்டம் (Council meeting) நடைபெறும் போது அதில் கலந்து கொண்டு தமிழில் பேசக்கூடாது என்று கட்டளை இட்டதாக அறிய முடிகின்றது.
அதே வேளை, சிங்கள மொழி விரிவுரையாளர் ஒருவர் தமிழில் பேச முடியும் என்று குறிப்பிட்டுள்ளார். அப்படியிருக்க குறித்த சில பீடங்களைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியில் பேசுவதை ஆட்சேபித்துள்ளார்கள். இவர்கள் புத்திஜீவிகளா? பேரினவாத அரசியல்வாதிகளின் முகவர்களா ? என்று தமிழ் மக்கள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்தத் தமிழ் முகவர்களின் தாய்மொழி தமிழ் என்பது வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இப்படியான தமிழ் முகவர்களால்தான் நமது தமிழர்களின் நிலை இவ்வாறு பாதிப்படைத்துள்ளது.
தமிழுக்கும், தமிழருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும் என்று பலர் தம் இன்னுயிர்களைத் தியாகம் செய்ததை இந்த முகவர்கள் ஏன் அறியாமல் இருக்கிறார்கள்.
இலங்கை அரசியல் யாப்பின்படி தமிழும் சிங்களமும் அரச கரும மொழியாகவும், தேசிய மொழிகளாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.அவ்வாறு ஏற்றுக் கொள்ளப்பட்ட தாய் மொழியை கிழக்குப் பல்கலைக் கழகத்தில் மட்டுப்படுத்த நினைக்கும் பேரினவாதத்திற்குத் துணை போகும் மோதாவிகள் யார்? இவர்களுக்கு என்ன தேவைப்படுகிறது.
இவர்களது பின்னணி என்ன? அடிப்படைவாத ஆளும் கட்சியின் எடுபிடிகளா ? என்றெல்லாம் சிந்திக்க வேண்டியுள்ளது. இவர்கள் மேலும் முகவர்களாகச் செயற்பட்டு தமிழுக்கும்.
தமிழர்க்கும் அநீதி இழைத்தால் இவர்களது முகத்திரைகளைக் கிழித்தெறிய வேண்டிய நிலை ஊடகத்துறைக்கும், உணர்வுள்ள தமிழர்க்கும் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றோம்.
இவர்களுக்குத் தமிழில் பேசுவது விருப்பம் இல்லை என்றால் தென்பகுதிப் பல்கலைக்கழகங்களுக்கு இடமாற்றம் பெற்றுச் செல்வதே பொருத்தமாக அமையும். தமிழருக்கு உதவிகள் செய்ய முடியாவிட்டால் பறவாயில்லை, உபத்திரத்தையாவது செய்யாதிருக்கட்டும் என கிழக்கு கல்விச் சமூகம் கவலை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!


மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை




உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!


உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
உள்ளூர்1 year ago
யாழில் கோரவிபத்து; அரச உத்தியோகஸ்தர் பலி!
-
ஆன்மீகம்2 years ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
உள்ளூர்1 year ago
முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
-
ஆன்மீகம்1 year ago
இவ்வாண்டில் இராஜதந்திரமா செயற்படக்கூடிய இராசிக்காரங்க இவங்கதான்!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் பரபரப்பை ஏர்படுத்திய தீ விபத்து; ஏராளமான சொத்துக்கள் நாசம்!
-
உள்ளூர்2 years ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
ஆன்மீகம்2 years ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
வாழ்க்கைமுறை2 years ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?