உள்ளூர்
உடல் எடையை குறைக்க இந்த விதைகள் உதவுமா?
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/06/Naazhikai-news-19-jpg.webp)
உடல் எடையை குறைக்க பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது.
உடல் எடையை குறைக்க வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும்.
எடை அதிகரிப்பதற்கு உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது.
எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.
விரைவான எடை இழப்புக்கான விதைகள்
உடல் எடையை குறைக்க பல உணவுகள் மற்றும் பானங்கள் உதவும். உதாரணமாக பானங்களில், புரோட்டீன் ஷேக்குகள், ஸ்மூதிகள், பழச்சாறுகள், தேநீர் போன்றவை உடல் எடையைக் குறைக்க பல வழிகளில் பயன் தரும் என கூறப்படுகின்றது.
பல பழங்கள், காய்கறிகள் மற்றும் விதைகளில் வைட்டமின்கள், ஆண்டி ஆக்சிடெண்டுகள் மற்றும் எடை இழப்புக்கு உதவும் பிற கலவைகள் நிறைந்துள்ளன.
ஒருவரது உடல் எடை அதிகரித்தால் அது அவரது தன்னம்பிக்கையையும் பாதிக்கின்றது. இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்பு தொங்கும் நிலையில் இருக்கும் தொப்பை போன்றவை நமது தோற்றத்தையே கெடுத்து விடுகின்றன.
கூடுதலாக இவை நமது உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் ஆபத்தானவை. ஜங்க் ஃபுட், பொரித்த உணவு, உடற்பயிற்சியின்மை போன்ற காரணங்களால் இடுப்பைச் சுற்றி கொழுப்பு சேரும்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில் சில குறிப்பிட்ட உணவுகளை நமது தினசரி டயட்டில் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை விரைவில் குறைக்கலாம்.
எடை குறைப்பு உணவுகளில் விதைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. சில விதைகளை உட்கொள்வதால் சில நாட்களின் நமது உடல் எடை குறைந்துவிடும்.
தொப்பை கொழுப்பும் மறைந்துவிடும். அத்தகைய விதைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
சியா விதைகள்
சியா விதைகளில் நார்ச்சத்து மற்றும் அதிக அளவு புரதம் உள்ளது. காலை உணவில் சியா விதைகளை உட்கொண்டால், வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும்.
இதன் காரணமாக நாம் கூடுதலாக சாப்பிடுவதையும், தேவையற்ற ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதையும் தவிர்க்கலாம்.
மறுபுறம், சியா விதைகள் வளர்சிதை மாற்றத்தை விரைவுபடுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இது அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது.
ஆளி விதைகள்
ஆளி விதைகளில் அதிக நார்ச்சத்து, புரதம், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஏராளமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.
ஆகையால் ஆளி விதைகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்க உதவுகிறது.
இதற்கு ஆளி விதைகளை காய்கறி, தயிர், பராத்தா ஆகியவற்றில் சேர்க்கலாம் அல்லது ஸ்மூத்தியாக உட்கொள்ளலாம்.
சூரியகாந்தி விதைகள்
எடை இழப்பு என்று வரும்போது, சூரியகாந்தி விதைகளை விட சிறந்தது எதுவுமில்லை.
சூரியகாந்தி விதைகளை உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கொழுப்பை எரிப்பது எளிதாகும்.
இதனுடன் இது குடல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
சூரியகாந்தி விதைகளை உங்கள் உணவில் சூப், டீ அல்லது ஏதேனும் பானமாக எடுத்துக் கொள்ளலாம்.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/Naazhikai.png)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/Naazhikai.png)
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
![](http://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.29.jpeg)
![](http://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.29.jpeg)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.28-1.jpeg)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.28-1.jpeg)
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-3-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-3-jpg.webp)
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-2-jpg.webp)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா12 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்12 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்12 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்12 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா12 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
வாழ்க்கைமுறை12 months ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்12 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
ஆன்மீகம்11 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?