சினிமா
80 லட்சத்தை பறிகொடுத்த நடிகை ராஷ்மிகா! நடந்தது என்ன?
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் மேனேஜர் ரூ.80 லட்சம் மோசடி செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராஷ்மிகா
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. தற்போது அனைத்து மொழி படங்களிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார்.
நடிகை ராஷ்மிகா நடிப்பில் தற்போது அனிமல் என்கிற படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்து வருகின்றார். இப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவுள்ள நிலையில், பான் இந்தியா படமாக இதனை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது மட்டுமின்றி தெலுங்கில் புஷ்பா 2 திரைப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்து வருகின்றார். தமிழிலும் ரெயின்போ என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகின்றார்.
இவ்வாறு நடிப்பில் முன்னணியாக இருந்து வரும் இவரிடம், இவரது மேனேஜர் பண மோசடி செய்துள்ளாராம். ஆம் ரூபாய் 80 லட்சம் மோசடி செய்துள்ள அந்த மேனேஜரை வேலையிலிருந்து ராஷ்மிகா நீக்கியுள்ளாராம். குறித்த நபர் சினிமாவில் அறிமுகமான ஆரம்பகாலத்திலிருந்தே மேனேஜராக இருந்து வருகின்றார். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.
உள்ளூர்
விரைவில் இலங்கை வரும் இளைய தளபதி விஜய்!
தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான இளையதளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.
அதோடு லியோ திரைப்படம் வெளியாகி முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது. தொடர்ந்து நடிகர் , விஜய் ‘தளபதி 68 ‘ படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.
இலங்கையில் ‘தளபதி 68 ‘ படப்பிடிப்பு
‘தளபதி 68’ இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 68 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படப்பிடிப்பு ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 68’ படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
அதேவேளை இளயதளபதி விஜய் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தை சேர்ந்த லண்டன் வாழ் புலம்பெயர் தமிழை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா
மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!
தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023) அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.
மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
கமல் மீது வழக்குத் தொடரப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தப்படுமா!
பிரபல தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் முறையிட்டதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் (Red card) வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா பூர்ணிமா ஜோவிகா ஐஷு ஆகியோர் கூட்டாக சேர்ந்து பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முத்திரை குத்தி பிரதீப்பை வெளியேற்றி விட்டனர் என விமர்சனம் எழுந்துள்ளது.
பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் இவ்வாரம் வெளியேற்றப்பட்டமைக் குறித்து விளக்கமளிக்காவிட்டால் அவரது அரசியல் நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
திறமையான ஜோவிகா
மேலும் பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா வனிதா போன்றல்லாமல் மிகவும் திறமையாக நன்முறையில் நடந்துக்கொண்டு வருகிறார் என இரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.
எனினும் தற்போது புல்லி கேங் என சொல்லப்படும் மாயாவுடன் இணைந்து நடந்துக் கொள்ளும் விதம் இரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பேற்றி உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக பிரதீப்பை வெளியேற்றுவதற்கான கடந்த வார எபிசோட்டில் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியபோது ஜோவிகா முதலில் குரல் எழுப்பியதால் ஜோவிகா பிரதீப் வெளியேற்றத்திற்கு பிரதான காரணமாகியுள்ளார் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆவேசமாக குரல் எழுப்பிய வனிதா
மக்களைத் தூண்டி விடுவதற்காக பொய்யான காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். என் மகள் ஜோவிகா பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசவே இல்லை. நான் வழக்கு தொடர்வேன்.
18 வயதான ஜோவிகா எதன் அடிப்படையில் பெண்களட பாதுகாப்பு என்று கூறி ரெட்கார்டு கொடுத்தீங்கன்னு கேட்டு கேஸ் போடுவாள் . இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவில்லையாயின் நான் அவதூறு வழக்கு தொடர்வேன்.
கமல் சார் தான் பெண்கள் பாதுகாப்பு என பேசினார் என வனிதா ஆவேசமாகப் பேசியுள்ளார்.
மேலும் பிளான் பண்ணிதான் பிரதீப்பை வெளியேற்றியுள்ளனர் என சிலர் காணொளிகளையும் பரப்பி வருகின்றனர். இதனால் என் மகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
கமல் சார் மீது வழக்கு
இவ்வாரம் இதுகுறித்து கமல் சார் இவ்வாரம் பேசவில்லையாயின் கமல் சார் மீது வழக்கு தொடர்வோம். தன் மகளின் எதிரடகாலம் குறித்தும் சிந்திக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.
இந்நிலையில் கமல்ஹாசன் இது குறித்து இவ்வாரம் கண்டிப்பாக பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நான் சட்டம் படிக்காவிட்டாலும் சட்டம் குறித்து எனக்கு எல்லாமே தெரியும் என வனிதா தெரிவித்துள்ளார்.
அதனால் சட்டப்படி வனிதாவுக்கு விளக்கம் அளிப்பார்களா இல்லை அவதூறு வழக்கைத் தொடர்வார்களா எனத் தெரியவில்லை . இவ்வாறான நிலையை கமல்ஹாசன் பிக் பாஸ் விஜய் டீவி கூட எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
-
உள்ளூர்1 year ago
யாழில் கோரவிபத்து; அரச உத்தியோகஸ்தர் பலி!
-
ஆன்மீகம்1 year ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்1 year ago
முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
-
ஆன்மீகம்1 year ago
இவ்வாண்டில் இராஜதந்திரமா செயற்படக்கூடிய இராசிக்காரங்க இவங்கதான்!
-
இந்தியா1 year ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
ஆன்மீகம்1 year ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் பரபரப்பை ஏர்படுத்திய தீ விபத்து; ஏராளமான சொத்துக்கள் நாசம்!