உலகம்
விரைவில் தொடங்கவுள்ள பிக்பாஸ் சீசன் 7; லீக்கான பெயர் பட்டியல்! இலங்கைத் தமிழருமா?
![Bigg boss season 7](https://naazhikai.com/wp-content/uploads/2023/07/Naazhikai-news-27-1-jpg.webp)
தமிழகத்தை தாண்டி வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களையும் ஈர்த்த நிகழ்ச்சி தென்னிய பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி ஆகும். புலபெயர் தமிழ் மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஆர்வமுடன் பார்க்கின்றாரகள்.
ஏனெனில் இலங்கை தமிழ் மக்களும் அதில் உள்வாங்கப்படுவதுதான் அதற்கு காதரணம். அந்தவகையில் லாஸ்லியா, தர்சன், ஜனனி, உள்லிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
பிக்பாஸ் சீசன் 7
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் பிக்பாஸ் 7வது சீசன் இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது போட்டியாளர்களுக்கான ஆடிஷன் நடைபெற்று வருவதாகவும் இந்த ஆடிஷனில் கலந்து கொண்ட சிலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கிட்டத்தட்ட உறுதி என்றும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெரும்பாலும் நிகழ்ழ்சியினை நடத்தும் தொகைக்காட்சி பிரபலங்களே கலந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனிலும் அது போல சிலர் போட்டியாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கசிந்த பெயர்ப் பட்டியல்
குறிப்பாக ’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ஜாக்லின் பிக் பாஸ் சீசன் 7வது சீசனின் போட்டியாளராக இருப்பார் என்று கூறப்படுகிறது.
அதேபோல் கடந்த 6 ஆவது சீசனில் ரக்சிதா மகாலட்சுமி கலந்து கொண்ட நிலையில் 7வது சீசனில் அவருடைய கணவர் தினேஷ் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி ’இரவின் நிழல்’ படத்தில் நடித்த நடிகை ரேகா நாயரும் பிக்பாஸ் சீசன் 7வது சீசனில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் கண்டெண்ட் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது.
இலங்கைத் தமிழருக்கு சான்ஸ் கிடைக்குமா
மேலும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் பிருத்விராஜ் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படும் அதேவேளை கோவையைச் சேர்ந்த பெண் டிரைவர் ஷர்மிளாவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அதேவேளை 6 2வது சீசனில் யாழ்ப்பாணத்தில் இருந்து ஜனனி கலந்துகொண்ட நிலையில் போட்டியின் இறுதிவரை செல்லாது இருப்பினும் , தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தையே தக்க வைத்ததுடன், இளைய தளபதி யின் லியோ படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த சீசனிலும் இலங்கை தமிழர் ஒருவர் கண்டிப்பாக கல்லந்துகொள்வார் என்பது திண்னம் .
மேற்கூறப்பட்ட பிரபலங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருந்தாலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் யார் யார் என்பது பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கும் நாளில் தான் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம்
கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-34-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-34-jpg.webp)
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் மோசடிகளில் சிக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
விரும்பிய தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த IMEI எண்ணைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
IMEI எண் என்பது International Mobile Equipment Identity என்பதனை குறிக்கின்றது.
இது அனைத்து கையடக்க தொலைபேசி சாதனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.
கையடக்க தொலைபேசி அட்டையில் காட்டப்படும் 15 இலக்க IMEI எண்ணை 1909 க்கு அனுப்புவதன் மூலம் IMEI எண்ணின் செல்லுபடியை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா இல்லையா என உடனடி பதில் செய்தி வரும் என குறிப்பிடப்படுகின்றது.
உலகம்
பிரித்தானியாவில் உயரிய விருது பெறும் ஈழத்தமிழர்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-33-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-33-jpg.webp)
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.
பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தொழிநுட்பத்தை உலகிலுள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா
மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/Naazhikai-7-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/Naazhikai-7-jpg.webp)
தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023) அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.
மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/01-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/01-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/02-1-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/02-1-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/03-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/03-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/04-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/12/04-jpg.webp)
-
இந்தியா12 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்12 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்12 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்12 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா12 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
வாழ்க்கைமுறை12 months ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்12 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
ஆன்மீகம்11 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?