உள்ளூர்
சகோதரிகளுக்கு கடிதம் எழுதி விட்டு இலங்கையில் பெண்ணொருவர் எடுத்த அதிர்ச்சி முடிவு!
ஹோமாகம பிரதேசத்தில் உயிரிழந்த நிலையில் பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவர் எழுதிய 3 கடிதங்களும் நேற்று (03-12-2023) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹோமாகம தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவத்தில் ஹோமாகம, அத்துரிகிரிய பகுதியை சேர்ந்த 45 வயதான நதிக்கா காசினி படவல என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் ஹோமாகம, அத்துரிகிரிய பகுதியை சேர்ந்த 45 வயதான நதிக்கா காசினி படவல என்ற பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஹோமாகம, அத்துரிகிரிய வீதியில் உள்ள வீடொன்றில் தனிமையில் வசித்து வரும் இந்தப் பெண், நியூசிலாந்து மற்றும் டுபாயில் வசிக்கும் தனது சகோதரிகளுடன் அடிக்கடி தொலைபேசி அழைப்புகள் மற்றும் உரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறான ஒரு நிலையில், நேற்று முன்தினம் பகல் முழுவதும் இப்பெண்ணை அழைத்த போதும் பதில் கிடைக்காததையடுத்து இதுபற்றி மற்றுமொரு உறவினரிடம் சகோதரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவரது உடல் அறையின் நடுவில் கிடப்பதை அவர் கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதிகாரிகள் குழுவினர் சம்பவ இடத்துக்கு வந்து, வீட்டுக்குள் சென்று சோதனையிட்டபோது, அறையின் நடுவில் உள்ள நாற்காலியில், மர்மமான முறையில் பெண் சடலம் கிடந்ததை அவதானித்துள்ளனர்.
மேலும், உயிரிழந்த பெண்ணின் சடலத்திற்கு அருகில் மாத்திரைகள் காணப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, நியூசிலாந்து மற்றும் டுபாயில் வசிக்கும் தனது சகோதரிகளுக்கு எழுதி கடிதங்களும் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த இருவரும் இலங்கை வந்ததன் பின்னரே இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா10 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்10 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா10 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
உள்ளூர்10 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்10 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்10 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
உள்ளூர்10 months ago
யாழில் ஆண்களுடன் தகாத உறவில் இளம் குடும்ப பெண்; பாலியல் தொற்றுள்ளாரா?
-
ஆன்மீகம்8 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?