fbpx
Connect with us

உள்ளூர்

அடக்கம் செய்யப்பட்டவர் மூன்று நாட்கள் பின் உயிருடன் வந்ததால் அதிர்ச்சி!

Published

on

உயிரிழந்ததாக கூறி அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து மீண்டும் உயிருடன் வந்தவரை பார்த்த உறவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்த சம்பவம் கம்பளையில்  இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கம்பளை பஸ் நிலையத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் மாரடைப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இரண்டு மாதங்களாக கம்பளை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.

அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்

இதனையடுத்து , கம்பளை, மேரிவில வத்த பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட சிலர் வைத்தியசாலைக்குச் சென்று 59 வயதுடைய மகன் லாசர் மைக்கேலின் சடலம் என கூறி குறித்த சடலத்தை அடையாளப்படுத்தியுள்ளார்கள்.

இந்நிலையில், பிரேதப் பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் குடும்பத்தினர் மரணச் சடங்குகள் செய்து சடலத்தை அடக்கம் செய்தநிலையில், அடக்கம் செய்யப்பட்டு மூன்று நாட்கள் கழித்து உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்ட நபர் வீடு திரும்பியுள்ளார்.

வீட்டு வந்த நபரை கண்டு  அதிர்ச்சியடைந்த குடும்பத்தார் சம்பவம் குறித்து அவருக்குத் தெரிவித்ததுடன்,   மரண விசாரணை அதிகாரி அலுவலகத்திலும் தகவல்  வழங்கிய நிலையில்,  சம்பவம் தொடர்பில் கம்பளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உள்ளூர்

சித்திரத் தேர் வெள்ளோட்டம்!

Published

on

By

மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது

அனைவரும் வருக… அருள்பெறுக…

-ஆலய பரிபாலானசபை

Continue Reading

உள்ளூர்

EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

Published

on

By

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Continue Reading

உள்ளூர்

மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!

Published

on

By

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.

தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.

அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை