fbpx
Connect with us

உள்ளூர்

தாயகத்தில் புத்துயிர் பெறும் மாவீரர் துயிலுமில்லங்கள்!

Published

on

தமிழ் மக்களின் உரிமைப் போரின்போது தமது உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் எதிர்வரும் நவம்பர் 27ஆம் திகதி ஆகும். தமிழ் மக்களால் மாவீரர் தினம் நினைவுகூரப்படவுள்ளமையை முன்னிட்டு இன்று (04) சிரமதானப் பணிகளும் மாவீரர் தின ஆரம்ப நிகழ்வும் இடம்பெற்றன.

மன்னார், ஆட்காட்டிவெளியில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்தில் இவ்வாண்டுக்கான மாவீரர் தின நிகழ்வுகளை நடத்துவதற்கான சிரமதான பணிகள் மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் மாவீரர் துயிலும் இல்ல பணிக் குழுவினரால் இன்று முன்னெடுக்கப்பட்டன.

மலர் வணக்கம் செய்யப்பட்டு மாவீரர் தினம் ஆரம்பிப்பு

இந்த சிரமதான பணிகள் மாவீரர் நெடுங்கீரனின் தந்தை வீரசிங்கம் தலைமையில்இடம்பெற்றன.

இன்றைய தினம் சிரமதானப் பணிகள் நிறைவடைந்ததன் பின்னர், முதல் பெண் போராளி இரண்டாம் லெப் மாலதியின் சகோதரனால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டு, மறைந்த மாவீரர் ஒருவரின் தந்தையினால் மலர் வணக்கம் செய்யப்பட்டு மாவீரர் தினம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த ஆரம்ப நாள் நிகழ்வு மற்றும் சிரமதான பணிகளில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், துயிலும் இல்ல பணிக் குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். 

உள்ளூர்

சித்திரத் தேர் வெள்ளோட்டம்!

Published

on

By

மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது

அனைவரும் வருக… அருள்பெறுக…

-ஆலய பரிபாலானசபை

Continue Reading

உள்ளூர்

EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

Published

on

By

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Continue Reading

உள்ளூர்

மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!

Published

on

By

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.

தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.

அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை