fbpx
Connect with us

உலகம்

கனடாவில் மனைவியை கொலைசெய்த யாழ்ப்பாண இளைஞன்!

Published

on

கனடாவில் முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றசாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவருக்கு, நான்கு ஆண்டுகளின் பின்னர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கனடாவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் ஸ்காபரோவில் பேருந்தில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தபோது தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டார்.

தர்சி அவள் இறந்த விதத்திற்கு தகுதியானவள் அல்ல

சம்பவம் குறித்து உயிரிழந்த பெண்ணின் முதல் கணவரான சசிகரன் தனபாலசிங்கம் மீது முதல் நிலை கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட நிலையில், சம்பவம் இடம்பெற்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சசிகரன் தனபாலசிங்கத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (17) காலை ஒரு சுருக்கமான தண்டனை விசாரணையின் போது, கருஞ்சா பரமேஸ்வரன், பாதிக்கப்பட்டவரின் பாதிப்பு அறிக்கையை நீதிமன்றத்தில் வாசித்தார்.

தனது நண்பரை “இதயம் கொண்ட ஆத்மா” என்று அழைத்தார். “தர்சி அவள் இறந்த விதத்திற்கு தகுதியானவள் அல்ல, ஆனால் இன்று நீதி வழங்கப்படுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று அவர் கூறினார்.

அதேசமயம் உயிரிழந்த  தர்சிகாவின்  குடும்பத்தினர் இலங்கையில் இருந்து ஜூம் இல்  விசாரணையைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

25 ஆண்டுகளுக்கு பரோலுக்கு தகுதி பெற முடியாது

செப். 11, 2019 அன்று ஜெகநாதனுடன் தொலைபேசியில் கடைசியாகப் பேசியதாக பரமேஸ்வரன், கூறினார். “அவளுடைய அலறல் குரலால் நான் பயந்தேன். அது என்னை என்றென்றும் வேட்டையாடும் மற்றும் என் தலையில் மீண்டும் ஒலிக்கும், ”என்று பரமேஸ்வரன் கூறினார்.

ஜெகநாதன் இறந்த முதல் ஒரு மாதத்திற்கு தன்னால் தூங்கமுடியவில்லை என்று அந்த அலறல் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும் அவளது துயரத்தைச் சமாளிக்க சிகிச்சையையும் நாட வேண்டியிருந்தது என்றும் பரமேஸ்வரன் நீதிமன்றில் கூறினார்.

அதேவேளை  தண்டனை வழங்கப்படுவதற்கு முன்னர் குற்றவாளிக்கு நீதிமன்றத்தில் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தனபாலசிங்கத்திற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

 அவர் கைது செய்யப்பட்ட பின்னர் 25 ஆண்டுகளுக்கு பரோலுக்கு தகுதி பெற முடியாது என்றும் நீதிபதி கூறினார்.

மேலும் தனபாலசிங்கத்திற்கும் வாழ்நாள் ஆயுத தடை விதிக்கப்பட்டதுடன், அவரது டிஎன்ஏவை தேசிய டிஎன்ஏ தரவு வங்கிக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உலகம்

கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!

Published

on

By

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

நுகர்வோர் மோசடிகளில் சிக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

விரும்பிய தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த IMEI எண்ணைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

IMEI எண் என்பது International Mobile Equipment Identity என்பதனை குறிக்கின்றது.

இது அனைத்து கையடக்க தொலைபேசி சாதனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.

கையடக்க தொலைபேசி அட்டையில் காட்டப்படும் 15 இலக்க IMEI எண்ணை 1909 க்கு அனுப்புவதன் மூலம் IMEI எண்ணின் செல்லுபடியை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா இல்லையா என உடனடி பதில் செய்தி வரும் என குறிப்பிடப்படுகின்றது.

Continue Reading

உலகம்

பிரித்தானியாவில் உயரிய விருது பெறும் ஈழத்தமிழர்!

Published

on

By

இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.

பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார்.

மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த தொழிநுட்பத்தை உலகிலுள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

Continue Reading

இந்தியா

மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!

Published

on

By

தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்  கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023)  அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.

இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது  ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.

மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை