உள்ளூர்
யாழ்ப்பாணத்தில் காணிகள் வாங்கும் புலம்பெயர் தமிழர்களுக்கு எச்சரிக்கை!
![](https://naazhikai.com/wp-content/uploads/2023/10/Naazhikai-11.png)
யாழ்ப்பாணத்தில் காணி மோசடிகள் தற்போது அதிகளவில் இடம்பெறுகின்றதாகவும் , வெளிநாட்டில் உள்ளவர்களை இலக்கு வைத்து , சமூக வலைத்தளங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து காணி மோசடிகளில் ஈடுபடுவதாகவும் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மஞ்சுளா செனரத் தெரிவித்துள்ளார்.
கடந்த 09மாத கால பகுதிகளில் பாரிய பண மோசடிகள் தொடர்பில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் , அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி செய்தமை தொடர்பிலானது எனவும்பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
பணம் மற்றும் காணி மோசடிகள்
யாழ்ப்பாணத்தில் வன்முறை சம்பவங்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் , பெருமளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும் தற்போது யாழ்ப்பாணத்தில் பாரிய பண மோசடிகளே இடம்பெற்று வருகின்றன.
கடந்த ஜனவரி மாதம் முதல் , கடந்த செப்டெம்பர் மாதம் வரையிலான கால பகுதியில் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் பண மோசடிகள் தொடர்பில் 26 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றில் 16 முறைப்பாடுகள் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி பண மோசடி செய்தமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்ததன் அடிப்படையில் இது வரையில் 13 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு , அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உண்மை தன்மைகளை உறுதிப்படுத்தி கொள்வனவு செய்யுங்கள்
சமூக ஊடங்களில் வெளியிடப்படும் விளம்பரங்களை நம்பி , அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கு இலக்கங்களுக்கு பணத்தினை வைப்பிலிடுகின்றனர்.
அவ்வாறு வைப்பில் இடும் போது , காரணத்தை தெளிவாக குறிப்பிட தவறுகின்றனர். இதன் காரணமாக மோசடி காரர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதில் சிரமங்கள் காணப்படுகின்றன.
அதோடு காணி பதிவாளர் திணைக்களத்தில் காணி தொடர்பிலான தகவல்களை பெற்றுக்கொள்ள கூடிய வசதிகள் இருந்தும் , பலர் போலி உறுதிகளை நம்பி பெருமளவான பணத்தினை கொடுத்து காணிகளை கொள்வனவு செய்து ஏமாறுகின்றனர்.
காணி வாங்குபவர்கள் காணி தொடர்பிலான முழுமையான தகவல்களை பெற்று காணிகளை கொள்வனவு செய்தால் பணத்தினை இழக்க தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/Naazhikai.png)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/Naazhikai.png)
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
![](http://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.29.jpeg)
![](http://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.29.jpeg)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.28-1.jpeg)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.28-1.jpeg)
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-3-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-3-jpg.webp)
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-2-jpg.webp)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா12 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்12 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்12 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்12 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா12 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
வாழ்க்கைமுறை12 months ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்12 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
ஆன்மீகம்11 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?