fbpx
Connect with us

சினிமா

எதிர்நீச்சல் சீரியல் மாரிமுத்து திடீர் மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. பிரபலங்கள் வருத்தம்

Published

on

Kunasekaran

எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகர் மாரிமுத்து திடீரென்று மாரடைப்பு காரணமாக மரணமடைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய சூழ்நிலையில் ட்ரெண்டிங் ஸ்டார் ஆக வலம் வந்த மாரிமுத்துவின் இறப்பிற்கு பலரும் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

சீரியல் நடிகர்கள் மற்றும் ரசிகர்கள், பிரபலங்கள் என பலர் மாரிமுத்துவின் இறப்பு குறித்த அதிர்ச்சியில் மீள முடியாமல் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலின் குணசேகரன் ஆக பிரபலம் அடைந்த மாரிமுத்து திடீரென்று இன்று அதிகாலை டப்பிங் பேசுவதற்காக சென்றிருந்த நிலையில் திடீரென்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்திருக்கிறார்.

இது குறித்து அந்த சீரியலின் இயக்குனர் திருச்செல்வம் வருத்தத்தோடு பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார். இவருக்கு இந்த நிலைமை வரும் என்று நாங்கள் கொஞ்சம் கூட நினைக்கவில்லை. இவருடைய குடும்பத்தினருக்கு நாங்கள் எப்படித்தான் ஆறுதல் சொல்ல போகிறோம் என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.

அதுபோல அரசியல் பிரமுகராக இருக்கும் சுப.வி இந்த அதிர்ச்சியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சில தினங்களுக்கு முன்புதான் நான் எதிர்நீச்சல் சீரியல் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று நான் என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் எழுதி இருந்தேன். அதில் குணசேகரன் ஆக மாரிமுத்து அந்த அளவிற்கு நடித்து இருப்பார். அவருடைய நடிப்பை குறித்து நான் பாராட்டியதற்கு எனக்கு நன்றியும் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருடைய இறப்பு இப்படியாகும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என்று கண்ணீரோடு பேசி இருக்கிறார்.

சில தினங்களுக்கு முன்புதான் மாரிமுத்து தன்னுடைய பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடி தன்னோடு நடித்த பிரபலங்கள் பலருக்கும் சாப்பாடு போட்டு இருந்தார்.

இந்த நிலையில் சில தினங்களுக்குள் இவருக்கு எந்த நிலைமையில் ஆக வேண்டும் என்று இவரோடு சீரியலில் தம்பியாக நடிக்கும் கமலேஷ் அதாவது சீரியலில் ஞானம் தன்னுடைய வருத்தத்தை தெரிவித்து இருக்கிறார்.

தொடர்ச்சியாக இந்த தகவல் தெரிந்ததும், அதிகமான ரசிகர்களும் சீரியல் பிரபலங்களும் முன்னணி நடிகர்களும் நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

உள்ளூர்

விரைவில் இலங்கை வரும் இளைய தளபதி விஜய்!

Published

on

By

தென்னிந்திய திரையுலகின் பிரபல நடிகரான இளையதளபதி விஜய் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்துள்ளது.

அதோடு லியோ திரைப்படம் வெளியாகி முதல் நாளே உலகளவில் ரூ. 148 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைத்தது. தொடர்ந்து நடிகர் , விஜய் ‘தளபதி 68 ‘ படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.

இலங்கையில் ‘தளபதி 68 ‘  படப்பிடிப்பு 

‘தளபதி 68’ இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 68 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த படப்பிடிப்பு ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 68’ படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.

அதேவேளை இளயதளபதி விஜய் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தை சேர்ந்த லண்டன் வாழ் புலம்பெயர் தமிழை என்பது குறிப்பிடத்தக்கது.  

Continue Reading

இந்தியா

மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!

Published

on

By

தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்  கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023)  அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.

இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது  ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.

மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.

Continue Reading

இந்தியா

கமல் மீது வழக்குத் தொடரப்பட்டு பிக் பாஸ் நிகழ்ச்சி இடைநிறுத்தப்படுமா!

Published

on

By

பிரபல தென்னிந்திய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தங்களுக்கு பாதுகாப்பு இல்லை என பெண்கள் முறையிட்டதனைத் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து பிரதீப் ரெட் கார்ட் (Red card) வழங்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

பிக் பாஸ் வீட்டில் உள்ள மாயா பூர்ணிமா ஜோவிகா ஐஷு ஆகியோர் கூட்டாக சேர்ந்து பிரதீப்பால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என முத்திரை குத்தி பிரதீப்பை வெளியேற்றி விட்டனர் என விமர்சனம் எழுந்துள்ளது.

பிரதீப் வெளியேற்றப்பட்டது குறித்து கமல்ஹாசன் இவ்வாரம் வெளியேற்றப்பட்டமைக் குறித்து விளக்கமளிக்காவிட்டால் அவரது அரசியல் நிலைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

திறமையான ஜோவிகா

மேலும் பிக்பாஸ் வீட்டில் ஜோவிகா வனிதா போன்றல்லாமல் மிகவும் திறமையாக நன்முறையில் நடந்துக்கொண்டு வருகிறார் என இரசிகர்களின் பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

எனினும் தற்போது புல்லி கேங் என சொல்லப்படும் மாயாவுடன் இணைந்து நடந்துக் கொள்ளும் விதம் இரசிகர்கள் மத்தியில் பெரும் கடுப்பேற்றி உள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக பிரதீப்பை வெளியேற்றுவதற்கான கடந்த வார எபிசோட்டில் பெண் போட்டியாளர்கள் உரிமைக்குரல் எழுப்பியபோது ஜோவிகா முதலில் குரல் எழுப்பியதால் ஜோவிகா பிரதீப் வெளியேற்றத்திற்கு பிரதான காரணமாகியுள்ளார் என நெட்டிசன்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆவேசமாக குரல்  எழுப்பிய வனிதா

மக்களைத் தூண்டி விடுவதற்காக பொய்யான காரணம் சொல்லி பிரதீப்பை வெளியேற்றியதாக விசித்ரா பேசுகிறார். என் மகள் ஜோவிகா பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசவே இல்லை. நான் வழக்கு தொடர்வேன்.

18 வயதான ஜோவிகா எதன் அடிப்படையில் பெண்களட பாதுகாப்பு என்று கூறி ரெட்கார்டு கொடுத்தீங்கன்னு கேட்டு கேஸ் போடுவாள் . இவ்விவகாரம் குறித்து விளக்கம் அளிக்கவில்லையாயின் நான் அவதூறு வழக்கு தொடர்வேன்.

கமல் சார் தான் பெண்கள் பாதுகாப்பு என பேசினார் என வனிதா ஆவேசமாகப் பேசியுள்ளார்.

மேலும் பிளான் பண்ணிதான் பிரதீப்பை வெளியேற்றியுள்ளனர் என சிலர் காணொளிகளையும் பரப்பி வருகின்றனர். இதனால் என் மகளுக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

கமல் சார் மீது வழக்கு 

இவ்வாரம் இதுகுறித்து கமல் சார் இவ்வாரம் பேசவில்லையாயின் கமல் சார் மீது வழக்கு தொடர்வோம். தன் மகளின் எதிரடகாலம் குறித்தும் சிந்திக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசன் இது குறித்து இவ்வாரம் கண்டிப்பாக பேசுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நான் சட்டம் படிக்காவிட்டாலும் சட்டம் குறித்து எனக்கு எல்லாமே தெரியும் என வனிதா தெரிவித்துள்ளார்.

அதனால் சட்டப்படி வனிதாவுக்கு விளக்கம் அளிப்பார்களா இல்லை அவதூறு வழக்கைத் தொடர்வார்களா எனத் தெரியவில்லை . இவ்வாறான நிலையை கமல்ஹாசன் பிக் பாஸ் விஜய் டீவி கூட எதிர்ப்பார்த்திருக்கமாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.       

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை