fbpx
Connect with us

உள்ளூர்

திருமணத்திற்கு தயாரான இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண்!

Published

on

அவிசாவளை பிரதேசத்தில் திருமணத்திற்கு தயாராக இருந்து இளைஞனை கடத்தி சென்று தாக்கிய பெண் மற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமண தினத்தன்று பயன்படுத்துவதற்காக வழங்கப்படும் மோட்டார் வாகனத்தை பரிசோதிப்பதாக கூறி இளைஞனை கடத்தி சென்றுள்ளனர்.

6 மணித்தியாலங்கள் அந்த இளைஞனை தடுத்து வைத்து தாக்கியதுடன், திருமணத்திற்கு புறம்பான உறவு தொடர்பில் தகவல் கோரியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாய்

இந்த பெண், இராணுவ சிப்பாயின் 50 வயதுடைய தாய் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இராணுவ சிப்பாயும் கடத்தப்பட்ட இளைஞரும் உறவினர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இராணுவ சிப்பாயின் மனைவிக்கு இரகசிய தொடர்பு இருப்பதாக சந்தேகநபர்கள் கூறுவதாகவும், கடத்தப்பட்ட இளைஞன் அதற்கு உதவியுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட இளைஞனின் கையடக்கத் தொலைபேசியில் இந்த விவகாரம் தொடர்பான பல ஆதாரங்கள் இருப்பதாகவும், அந்த ஆதாரங்களைப் பெறுவதற்காகவே இந்த கடத்தல் இடம்பெற்றதாகவும் சந்தேக நபர்கள் பொலிஸாரின் விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

திருமணம்

கடத்தப்பட்ட இளைஞனின் திருமணம் சில தினங்களில் நடைபெற உள்ளதாகவும், திருமண பயணத்திற்கு கார் தருவதாக கூறி இராணுவ சிப்பாய் அழைத்து வந்து இந்த கடத்தலை மேற்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த இளைஞன் தல்துவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரிவிக்கப்படுகின்றது. 25 வயதுடைய இளைஞரை கடத்தியதற்காக கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் 26 வயதுடையவராகும்.

இவரும் தல்துவ பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும் முல்லைத்தீவில் பணிபுரிந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர்களை அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூர்

சித்திரத் தேர் வெள்ளோட்டம்!

Published

on

By

மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது

அனைவரும் வருக… அருள்பெறுக…

-ஆலய பரிபாலானசபை

Continue Reading

உள்ளூர்

EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

Published

on

By

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Continue Reading

உள்ளூர்

மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!

Published

on

By

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.

தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.

அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை