உலகம்
மாதம் 2 கோடி ரூபா சம்பளம்: மாணவர் ஒருவருக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு!

இந்திய மாணவன் ஒருவர் 50 இலட்சம் இந்திய ரூபா (இலங்கை ரூபாவில் சுமார் 2 கோடி ரூபா) சம்பளத்திற்குக் கூகுளின் வேலை வாய்ப்பை பெற்று, வளர்ந்துவரும் மாணவர்களுக்கு உதாரணமாக மாறியுள்ளார்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம்-புனே பகுதியைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர் (Harshal Juikar) என்னும் இளம் பட்டதாரி மாணவனுக்கே இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.
புனே பகுதியில் வசிக்கும் நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த ஹர்ஷல் ஜூய்கர், அதே நகரத்தில் உள்ள எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில் (MIT World Peace University) எம்.எஸ்.சி. பிளாக்செயின் டெக்னாலஜி (M.Sc in Blockchain Technology) படிப்பை முடித்துள்ளார்.
பல்கலைக்கழக நேர்முகத் பரீட்சை
படிக்கும்போதே, இவரது அதீத திறமையால், கூகுள் நிறுவனத்தில் ஜூனியர் டேட்டா சயின்டிஸ்ட் (Junior Data Scientist) இன்டர்ன்ஷிப்புக்கு தெரிவாகியுள்ளார்.
இதையடுத்து, 1.5 ஆண்டுகள் பயிற்சியாளராக பணிபுரிந்துள்ளார். அந்த நேரத்தில் இவரது திறமையும், தொழில்நுட்பம் மீதான அவரது ஆர்வமும் அவருக்குக் கூகுள் நிறுவனத்துடைய நன்மதிப்பை பெற்றுக் கொடுத்துள்ளது.
அதன்பின் படிப்பை முடித்த அவருக்கு எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்தில் கூகுள் நிறுவனம் நடத்திய பல்கலைக்கழக நேர்முகத் பரீட்சையில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட ஹர்ஷல் ஜூய்கர், அந்த நிறுவனத்தின் டேட்டா சயின்டிஸ்ட் பணியிடத்தைத் தட்டிச் சென்றுள்ளார்.
வாழ்த்துகளும், பாராட்டுகளும்
இது தொடர்பில் ஹர்ஷல் ஜூய்கர் கூறியுள்ளதாவது, அது, எனக்குக் கற்பனைக்கும் அப்பாற்பட்ட வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது.
இந்தப் பயணம் முழுவதும் எனக்கு ஆதரவு அளித்த எம்.ஐ.டி. வேர்ல்ட் பீஸ் பல்கலைக்கழகத்துக்கு, நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
இவர்களின் உதவி இல்லாமல், இந்த குறிப்பிடத்தக்கச் சாதனை சாத்தியமாகியிருக்காது” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் படித்த பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ரவிக்குமார் சிட்னிஸ் கூறுகையில், “ஹர்ஷலின் சாதனைக்காக நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.
அவரது, இந்த வெற்றியானது, எங்களது கல்வி நிறுவத்தின் அர்ப்பணிப்பின் பிரதிபலிப்பாகும். அதே நேரத்தில், படித்து வரும் மாணவர்களுக்குத் தனிப்பட்ட திறமைகளை வளர்த்துக் கொள்வதற்கும், புதுமையான கலாச்சாரத்தில் நுழைவதற்கும் இந்த வெற்றி உத்வேகமாக அமைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
ஹர்ஷல் ஜூய்கருக்கு பல தரப்பில் இருந்து வாழ்த்துகளும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.
உலகம்
கையடக்க தொலைபேசி கொள்வனவு செய்ய தயாராக இருப்பவர்களுக்கு முக்கிய தகவல்!


இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட கையடக்க தொலைபேசிகளை மாத்திரமே வாடிக்கையாளர்கள் கொள்வனவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.
நுகர்வோர் மோசடிகளில் சிக்குவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நிறுவனம் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
விரும்பிய தொலைபேசி தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்த IMEI எண்ணைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
IMEI எண் என்பது International Mobile Equipment Identity என்பதனை குறிக்கின்றது.
இது அனைத்து கையடக்க தொலைபேசி சாதனங்களுக்கும் ஒதுக்கப்பட்ட தனித்துவமான 15 இலக்க எண்ணாகும்.
கையடக்க தொலைபேசி அட்டையில் காட்டப்படும் 15 இலக்க IMEI எண்ணை 1909 க்கு அனுப்புவதன் மூலம் IMEI எண்ணின் செல்லுபடியை சரிபார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கையடக்க தொலைபேசி பதிவு செய்யப்பட்டதா இல்லையா என உடனடி பதில் செய்தி வரும் என குறிப்பிடப்படுகின்றது.
உலகம்
பிரித்தானியாவில் உயரிய விருது பெறும் ஈழத்தமிழர்!


இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஒருவருக்கு பிரித்தானியாவில் உயரிய விருது கிடைக்கவுள்ளதாக தகவலறியப்பட்டுள்ளது.
பொருட்களின் இருப்பிடத்தை கண்டரிவதற்கான புதிய மின்னணு பொறிமுறையொன்றை கண்டுபிடித்த இலங்கையரை பாராட்டி பிரித்தானியா உயரிய விருது வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரியை பிறப்பிடமாக கொண்ட கலாநிதி சபேசன் சிதம்பர என்பரே இந்த சாதனையை படைத்துள்ளார்.
மருத்துவ பீடங்களில் இந்த தொழிநுட்பத்தை பயன்படுத்தி மருத்துவ உபகரணங்களை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்த தொழிநுட்பத்தை உலகிலுள்ள அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்ப்பதே தமது நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா
மனங்களை சம்பாதித்த மாமனிதன் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம்!


தென்னிந்திய பிரபல நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந் கொவிட் தொற்று ஏற்பட்டதன் காரணமாக நேற்று (28.12.2023) அதிகாலை மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நிலையில் காலமானார்.
இவருடைய மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த விஜயகாந்த் உடல் இன்று காலை சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.
சந்தன பேழை அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், தேமுதிக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்திய நிலையில் இறுதி ஊர்வலமானது ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில், விஜயகாந்தின் உடலை தாங்கும் சந்தனப் பேழை தயாராகியிருக்கிறது.
மேலும், குறித்த சந்தன பேழையில் ‘புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த்’ என்று பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.








-
உள்ளூர்1 year ago
யாழில் கோரவிபத்து; அரச உத்தியோகஸ்தர் பலி!
-
ஆன்மீகம்2 years ago
1113 ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ள அரிய சேர்க்கை ; ஜோதிடம் கூறுவது என்ன?
-
ஆன்மீகம்1 year ago
இவ்வாண்டில் இராஜதந்திரமா செயற்படக்கூடிய இராசிக்காரங்க இவங்கதான்!
-
உள்ளூர்1 year ago
முல்லைத்தீவில் வாகன விபத்து – இளைஞன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!
-
உள்ளூர்1 year ago
கொழும்பில் பரபரப்பை ஏர்படுத்திய தீ விபத்து; ஏராளமான சொத்துக்கள் நாசம்!
-
உள்ளூர்2 years ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
ஆன்மீகம்2 years ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?
-
வாழ்க்கைமுறை2 years ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?