உள்ளூர்
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையில் உயிரிழந்த 3 வயது சிறுவன்! பகீர் கிளப்பும் ஆதாரங்கள்!
![Colombo lady richsway](https://naazhikai.com/wp-content/uploads/2023/07/Naazhikai-news-4-1-jpg.webp)
லேடி ரிஜ்வே வைத்தியசாலை யில் சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் சடலம் இன்றைய தினம் (30-07-2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்படி, இன்று மாளிகாவத்தை மையவாடியில் நடைபெற்ற இந்த இறுதிக் கிரியைகளில் ஏராளமான பொதுமக்கள், அரசியல்வாதிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த 3 வயதான சிறுவன் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக சிறுநீர்த் தொற்று நோயினால் அவதிப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை யில் சிறுவன்
இதனையடுத்து சிறுவனை லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் பரிசோதித்தபோது, சிறுவனின் இடது சிறுநீரகத்தில் இருந்த குறைபாடு காரணமாக அவனது இடது சிறுநீரகத்தை நீக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சிறுவனின் பெற்றோருக்கு ஆலோசனை வழங்கியிருந்தனர்.
சத்திர சிகிச்சை
சத்திர சிகிச்சைக்கு முன்னர் முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுவனின் இடது பக்க சிறுநீரகம் 9 வீதமும் வலது பக்க சிறுநீரகம் 91 வீதமும் செயற்பாட்டில் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செயலிழந்து இருக்கும் இடது பக்க சிறுநீரகத்தை அகற்றுவதற்கான சத்திரசிகிச்சை கடந்த வருடம், (24.12.2022) அன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சத்திர சிகிச்சையை மருத்துவர் மலிக் சமரசிங்கவின் ஆலோசனையின் பேரில் மருத்துவர் நவீன் விஜயகோன் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சத்திரசிகிச்சையின் பின்னர் சிறுவனுக்கு சிறுநீரை வெளியேற்றுவதில் ஏற்பட்ட சிரமத்தைத் தொடர்ந்து மீண்டும் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த ஸ்கேன் பரிசோதனையில் இரு சிறுசீரகங்களும் அகற்றப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, சத்திர சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் தமது தரப்பில் தவறு நடந்ததை குழந்தையின் பெற்றோரிடம் ஒப்புக் கொண்டுள்ளனர்.
அதாவது பாதிக்கப்பட்டிருந்த இடது பக்க சிறுநீரகத்துடன் வலது பக்க சிறுநீரகமும் தவறுதலாக அகற்றப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
சிறுவனுக்கு எப்படியாவது சிறுநீரகம் ஒன்றை பொருத்தி அவனை குணப்படுத்துவதாக அந்த மருத்துவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்.
கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலை யில் கடுமையான வலிகளுடன் சிறுவன்
இயந்திரத்தின் உதவியுடன் கடுமையான வலிகளுடன் சிறுவன் கடந்த 7 மாதங்களை கடத்தியுள்ளார்.
இருப்பினும், குறித்த விவகாரத்தை வெளியே கசிய விட வேண்டாம், தம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்று மருத்துவர்கள் வழங்கிய வாக்குறுதியை ஹம்தியின் பெற்றோர் முழுமையாக நம்பி இருந்துள்ளனர்.
அதன் பிரகாரம் அவர்கள் மருத்துவர்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.
நாட்கள் செல்ல செல்ல மருத்துவர்கள் வழங்கியது வெறும் பொய் வாக்குறுதிகள் என்பது தெரியவந்தது. குறித்த சிறுவன் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்தார்.
மருத்துவர்களால் கைவிடப்பட்ட பெற்றோர்கள் செய்வதறியாது தவித்தனர். இந்நிலையில் கடந்த வௌ்ளிக்கிழமை மாலை சிறுவன் ஹம்தி உயிரிழந்தார்.
ஒரு வார காலமாக “கோமா” நிலையிலிருந்த சிறுவன், விஷக் கிருமி உடலில் புகுந்ததால் ஏற்பட்ட மரணம் என வழமையாக விடுக்கும் அறிக்கையை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது.
வைத்தியசாலையின் இந்த செயற்பாடு தகவல் கிடைத்தவுடன் ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா நெட்வர்க் மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் ஊடகங்கள் மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோரைத் தொடர்பு கொண்டு விபரங்களை எடுத்துக் கூறினர்.
இலங்கை ஊடகங்களில் பேசுபொருளானது,
ஊடகங்கள் சிறுவனுக்கு நடந்த அநீதிக்காக குரல் கொடுக்க ஆரம்பித்தவுடன் மருத்துவமனை பணிப்பாளர், ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் சிறுவனின் சிறுநீரகங்கள் ஒன்றோடொன்று இணைந்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
இரு சிறுநீரகங்களும் வெவ்வேறாக இல்லாமல் அதன் கீழ் பகுதிகள் ஒன்றோடொன்று இணைந்திருக்கும் நிலை Horseshoe என்று அழைக்கப்படுகிறது.
மருத்துவமனை பணிப்பாளர் கூறுவது போன்ற அமைப்பில் சிறுவனின் சிறுநீரகங்கள் இருக்கவில்லை என்பதற்கு ஏற்கனவே எடுக்கப்பட்ட சிறுவனின் மருத்துவ பரிசோதனை அறிக்கைள் சான்றுகளாக இருக்கின்றன்றன.
அவ்வாறு சிறுநீரகங்கள் இரண்டும் ஒன்றோடொன்று இணைந்திருந்து அவை அகற்றப்பட்டிருந்தால், சத்திர சிகிச்சையின் பின்னர் மருத்துவ (Histopathology) பரிசோதனைக்கு இடது பக்க சிறுநீரகம் மட்டும் ஏன் அனுப்பப்பட்டது என்பதற்கான விளக்கத்தை மருத்துவமனையின் பணிப்பாளர் தெளிவு படுத்த வேண்டுமென சிறுவனின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
சத்திர சிகிச்சையின் பின்னர் கடந்த 25ம் திகதி டிசம்பர் மாதம் 2022 அன்று எடுக்கப்பட்ட குறித்த பெத்தொலொஜி அறிக்கையில் சிறுவனின் அகற்றப்பட்ட இடது சிறுநீரகம் பற்றிய தகவல்கள் மட்டுமே இருக்கின்றன.
வலது பக்க சிறுநீரகம் தொடர்பான எந்த தகவல்களும் அந்த மருத்துவ அறிக்கையில் இல்லை.
அப்படி இரண்டு சிறுநீரகங்கள் ஒன்றாக இணைந்திருந்து சத்திரசிகிச்சையின் போது தவறுதலாகவோ, தவிர்க்க முடியாமலோ அகற்றப்பட்டிருந்தால் அது பற்றி மருத்துவ அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அப்படியான குறிப்புகள் ஏதும் அவற்றில் இல்லை.
இந்த நிலையில் சிறுவனின் சடலத்தை பெற்றுக் கொள்வதிலும் சிக்கல்கள் ஏற்பட்டது.
இதனையடுத்து சனிக்கிழமை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, பொரளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, லேடி ரிட்ஜ்வே மருத்துவமனைப் பணிப்பாளர் ஆகியோருடன் ஶ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் ஊடகவியலாளர் அஷ்ரப் அலீ தொடர்புகளை ஏற்படுத்தி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இவ்வாறான நிலையில் நீண்ட இழுபறிக்குப் பின்னர் இன்று மாலை சிறுவனின் ஜனாசா விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு, மருத்துவக் கவுன்சில், சுகாதார அமைச்சு ஆகியவற்றில் முறைப்பாடுகளை மேற்கொள்ள ஶ்ரீ லங்கா முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/Naazhikai.png)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/Naazhikai.png)
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
![](http://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.29.jpeg)
![](http://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.29.jpeg)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.28-1.jpeg)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/02/WhatsApp-Image-2024-02-24-at-11.24.28-1.jpeg)
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-3-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-3-jpg.webp)
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-2-jpg.webp)
![](https://naazhikai.com/wp-content/uploads/2024/01/Naazhikai-2-jpg.webp)
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா12 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்12 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்12 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்12 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா12 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
வாழ்க்கைமுறை12 months ago
நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க விரும்புகின்றீர்களா?
-
உள்ளூர்12 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
ஆன்மீகம்11 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?