fbpx
Connect with us

உள்ளூர்

ஒரே நாளில் சுமார் 20.3 பில்லியன் இழந்த எலான் மஸ்க்!

Published

on

உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க் நேற்று ஒரே நாளில் சுமார் 20.3 பில்லியன் டொலர்களை தனது சொத்து மதிப்பில் இழந்துள்ளார்.

டெஸ்லா, டுவிட்டர், ஸ்பேஸ் எக்ஸ், நியூராலிங்க் போன்ற நிறுவனங்களை நிர்வகித்து வருகிறார் 52 வயதான மஸ்க். தற்போது அவரது மொத்த சொத்து மதிப்பு 234 பில்லியன் டொலர்கள்.

டெஸ்லா பங்கு விலையில் வீழ்ச்சி

அதனால் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தில் உள்ளார். இருந்தும் நேற்று ஒருநாள் மட்டுமே சுமார் 20.3 பில்லியன் டொலர்களை தனது சொத்து மதிப்பில் அவர் இழந்துள்ளார்.

டெஸ்லா பங்குகளின் விலையில் வீழ்ச்சி நேற்று ஏற்பட்டது. அந்நிறுவனத்தின் பங்கு ஒன்றுக்கு 9.7 சதவீதம் என்ற அடிப்படையில் சரிந்தது. அதனால் ஒரே நாளில் 20 பில்லியன் டொலர்களை மஸ்க் இழந்துள்ளார்.

அதன் காரணமாக உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் உள்ள மஸ்க் மற்றும் பெர்னார்ட் அர்னால்ட் இடையே வெறும் 33 பில்லியன் டொலர்கள் தான் வித்தியாசம் உள்ளது. பெர்னார்ட் அர்னால்ட், தற்போது 201 பில்லியன் டொலர்களை தனது சொத்து மதிப்பாக கொண்டுள்ளார்.

ஜெஃப் பெஸோஸ், பில் கேட்ஸ், லேரி எல்லிசன் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

அதேவேளை இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி 99.5 பில்லியன் டொலர்களுடன் உலக பணக்காரர்களில் பட்டியலில் தற்போது 11ஆவது இடத்தில் உள்ளதுடன் கெளதம் அதானி இந்தப் பட்டியலில் 22ஆவது இடத்தில் உள்ளார்.

உள்ளூர்

சித்திரத் தேர் வெள்ளோட்டம்!

Published

on

By

மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது

அனைவரும் வருக… அருள்பெறுக…

-ஆலய பரிபாலானசபை

Continue Reading

உள்ளூர்

EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!

Published

on

By

உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி  தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.

இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Continue Reading

உள்ளூர்

மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!

Published

on

By

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.

தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.

அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement

பிரபல்யமானவை