உள்ளூர்
பெண் வைத்தியரின் மோசமான செயல்; 24 மணிநேரம் முடங்கும் கொழும்பு சிறுவர் வைத்தியசாலை!
வரலாற்றில் முதல்தடவையாக கொழும்பு லேடி ரிஜ்வே வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று 24 மணிநேர பணிப்பகிஸ்கரிப்பினை முன்னெடுக்கவுள்ளனர்.
வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு எதிராக,அரசமருத்துவஅதிகாரிகள் சங்கம் வெளிநோயாளர் பிரிவில் இவ்வாறு பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபடவுள்ளது.
சீறி விழும் பெண் மருத்துவர்
குறித்த மருத்துவர் தொடர்பில் சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அப்பெண் வைத்தியர் அனைவருடனும் சீற்றத்துடன் நடந்துகொள்கின்றார் என அவர் தெரிவித்துள்ளார்.
லேடிரிஜ்வே வைத்தியசாலையின் இயக்குநரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் இந்த பிரச்சினைக்கு தீர்வை காணத்தவறிவிட்டனர் என அரசமருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளா வைத்தியர் சமில் விஜயசிங்க சுட்டிக்காட்டினார்.
இதன் காரணமாக குறிப்பிட்ட வைத்தியருடன் ஏனைய வைத்தியர்கள் இணைந்து பணியாற்ற முடியாதநிலையேற்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே மருத்துவமனையின் செயற்பாடுகள் சுமூகமான முறையில் இடம்பெறுவதை உறுதி செய்வதற்காக அதிகாரிகள் இந்த விவகாரத்திற்கு தீர்வை காணவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
லேடிரிஜ்வே வைத்தியசாலையின் வரலாற்றில் இடம்பெறவுள்ள முதலாவது தொழிற்சங்க போராட்டம் இதுவென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இன்றைய தொழிற்சங்க போராட்டம் சிறுவர்களை ஆபத்துக்குள்ளாக்க கூடிய ஒன்று எனவும் இது ஒரு மனிதாபிமானமற்ற நடவடிக்கை என வைத்தியசாலையின் இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர்
சித்திரத் தேர் வெள்ளோட்டம்!
மட்டக்களப்பு குருமண்வெளி அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய சித்திரத்தேர் வெள்ளோட்டம் 2024-02-24ம் திகதி சனிக்கிழமை மாசி மகத்தன்று மாலை 03-30 மணியளவில் இடம்பெற உள்ளது
அனைவரும் வருக… அருள்பெறுக…
-ஆலய பரிபாலானசபை
உள்ளூர்
EPF – ETF மனுக்கள் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு!
உள்நாட்டு கடனை மறுசீரமைப்பதில் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் உறுப்பினர்களுக்கு பாதகம் ஏற்படுவதாக குற்றம்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களை ஒக்டோபர் 30 ஆம் திகதி பரிசீலிக்க உயர் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டது.
இது தொடர்பான மனுக்கள் எஸ். துரைராஜா, ஷிரான் குணரத்ன மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டது.
சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த மனுக்களை விசாரணை செய்யாமல் நிராகரிப்பதற்கு அடிப்படை ஆட்சேபனைகளை முன்வைப்பதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பல மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மனுக்களை விசாரிக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் தனது அடிப்படை ஆட்சேபனையில் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர் சங்கத்தின் அழைப்பாளர் என்டன் மார்கஸ் உள்ளிட்ட 04 தரப்பினரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளூர்
மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும்!
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று (23) யாழில் ஊடக சந்திப்பினை நடாத்தினர்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் இருக்கும் இந்திய உயர்ஸ்தானிகருடன் ஒரு சந்திப்பில் ஈடுபட்டோம். அதில் இலங்கை தொடர்பான பிரச்சினைகளை தெரிவித்தோம்.
தமிழ் மக்களின் காணிகளை சுவிகரிப்பது, தமிழ் மக்களின் பல பிரச்சினைகள் தொடர்பிலும் தெரிவித்தோம்.
அத்தோடு நாட்டில் மாகாண சபை தேர்தல் நடந்த வேண்டும் என்றும் 13 ஆவது திருத்தத்தில் வழங்கப்பட்ட அதிகாரங்களை வழங்கப்பட வேண்டும் என அவரிடம் தெரிவித்தோம் என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
-
இந்தியா10 months ago
இந்திய சினிமாவில் கதாநாயகியாக களமிறங்கும் யாழ் யுவதி!
-
உள்ளூர்10 months ago
யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி கைது!
-
இந்தியா10 months ago
குறைவடைந்த தங்கத்தின் விலை; தங்கம் வாங்க சரியான நேரம் இது தான்!
-
உள்ளூர்10 months ago
யாழ் பல்கலைக்கழக மாணவியொருவர் தூக்கில் தொங்கி உயிரிழப்பு
-
உள்ளூர்10 months ago
கொழும்பில் இளம் குடும்பஸ்தர் படுகொலை; பதைபதைக்கும் சம்பவம்!
-
உள்ளூர்10 months ago
இலங்கைக்கு வந்த நெதர்லாந்து பெண்ணிற்கு நேர்ந்த துயரம்!
-
உள்ளூர்10 months ago
யாழில் ஆண்களுடன் தகாத உறவில் இளம் குடும்ப பெண்; பாலியல் தொற்றுள்ளாரா?
-
ஆன்மீகம்8 months ago
நேருக்கு நேர் இருக்கும் புதனும், சனியும் அதிர்ஷ்டத்தை பெறப்போகும் அந்த 4 ராசிக்காரர்களுக்கும் யார்?