உள்ளூர்

குழந்தையின் மீது வெந்நீரை ஊற்றிய தந்தை; நேர்ந்த கதி!

Published

on

தனது மூன்று வயது மகன் மீது வெந்நீரை ஊற்றிய குற்றச்சாட்டில் 34 வயதுடைய தந்தை லிந்துலை பொலிஸாரால் இன்றைய தினம் (25-07-2023) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். 

 இச் சம்பவம் லிந்துலை பொலிஸ் பிரிவிற்க்கு உட்பட்ட பெயாவள் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. 

வைத்தியசாலையில் சிகிச்சை

தற்போது லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தை, தந்தையின் தாயாரால் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், சந்தேக நபரும் அவரது மனைவியும் கொழும்பில் வேலை செய்து தங்கியிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

சந்தேக நபர் நேற்று (ஜூலை 24) இரவு குடிபோதையில் தனது தாயின் வீட்டிற்கு வந்து தனது தாயுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அதைத் தொடர்ந்து அவர் தனது மூன்று வயது மகன் மீது வெந்நீரை ஊற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர், தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்ட நிலையில், நாளை (ஜூலை 26) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version