உள்ளூர்

கொழும்பில் பரபரப்பை ஏர்படுத்திய தீ விபத்து; ஏராளமான சொத்துக்கள் நாசம்!

Published

on

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை (12) நள்ளிரவு தீ பரவிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எனினும் இந்த அனர்த்ததில் யாருக்கும் பாதிப்பில்லை என கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தீ விபத்து ஏற்பட்டபோது கட்டிடத்தின் மேல் மாடியில் இருந்த இருவர் எவ்வித காயங்களுமின்றி தப்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

28 தீயணைப்பு வீரர்கள் தீ பரவலை கட்டுப்படுத்தியபோதும் ஏராளமான சொத்துக்கள் நாசமடைந்துள்ளன.

மின்கசிவு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டதுடன், மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version