உள்ளூர்

குழந்தையை பணய கைதியாக்கி பொலிஸார் மீது தாக்குதல்!

Published

on

தனது குழந்தையை கூரிய ஆயுதத்தால் தாக்கியதுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களையும் தாக்கிய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மதுரங்குளி, ஜின்னவத்தை பிரதேசத்தில் பொலிஸ் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக வந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணை நடத்தச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்களே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட குழந்தை 

சம்பவ இடத்தில் சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் தயாரான போது, சந்தேக நபர் குழந்தையை பணயக்கைதியாக பிடித்து கூரிய ஆயுதத்தால் குழந்தையின் முதுகில் வெட்டியுள்ளார்.

பாரிய முயற்சிகளின் பின் காப்பாற்றப்பட்ட குழந்தை புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

அத்துடன், தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மதுரங்குளிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version