உள்ளூர்

தந்தையின் தாகம் தீர்க்க உயிரை விட்ட மகன்!

Published

on

மட்டக்களப்பில் தந்தையின் தாகம் தீர்க்க தென்னை மரத்தில் ஏறிய 21வயதுடைய இளைஞன் தவறி விழுந்து பலியான சம்பவமொன்று ஞாயிற்றுகிழமை மாலை (11) இடம்பெற்றுள்ளது.

கடந்த 9 ஆம் திகதி தந்தையும் மகனும் சித்தாண்டியிலுள்ள மரக்கறி விற்பனை நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

தந்தைக்கு உடற்சோர்வு

இதன்போது தந்தைக்கு உடற்சோர்வுடன் களைப்பும் ஏற்பட்டதால் தாகத்தை தணிக்க அருகிலுள்ள சுமார் 20 அடி உயரமுள்ள தென்னை மரத்தில் இளனி ஆய்ந்து கொடுப்பதற்காக மகன் ஏறியுள்ளார்.

மரத்தில் ஏறிய மகன் தந்தை பார்த்துக்கொண்டிருக்கும் போதே மகன் தவறி விழுந்து உணர்விழந்துள்ளார்.

இதனையடுத்து உடனடியாக மாவடிவெம்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மகன் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version