உள்ளூர்

யாழ்ப்பாணம் கீரிமலையில் தலையுடன் கைதான இளைஞர்!

Published

on

யாழ்ப்பாணம் கீரிமலையில் மாட்டின் தலையுடன் இளைஞன் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (12) பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீரிமலை பகுதியில் சட்டவிரோதமான முறையில் மாடொன்றை இறைச்சியாக்குவதாக காங்கேசன்துறை பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

அந்த தகவலின் பிரகாரம் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்த போது, சம்பவ இடத்தில் மாட்டின் தலையுடன் நின்ற இளைஞனை கைது செய்தனர்.

கைதுசெய்யப்பட்ட இளைஞனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து, வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸார், மாட்டிறைச்சியுடன் தப்பிச் சென்ற ஏனைய நபர்களை தேடி வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version