உள்ளூர்

மதுபான நிலையங்களுக்கு பூட்டு; மதுப்பிரியர்கள் கவலை!

Published

on

15ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்துள்ளது. தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்னதாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மதுவரி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்துக்கு இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version