உள்ளூர்

காதலனை பழிவாங்க மகளின் நிர்வாண படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண்!

Published

on

காதலை முறித்த காதலனின் ஏழு வயது மகளின் நிர்வாண படங்களை இணையத்தளத்தில் பதிவிட்ட பெண் ஒருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருமணமான நபரொருவருடன் பல வருட  காதல்

சம்பவத்தில் தேயிலை தொழிற்சாலையில் பணிபுரியும் கம்பஹா கலகெட்டிஹேன பிரதேசத்தை சேர்ந்த பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

தொழிற்சாலையில் அவருடன் பணிபுரியும் திருமணமான நபரொருவருடன் பல வருட காலமாக காதல் உறவில் ஈடுபட்டிருந்துள்ளார்.

இந்நிலையில் அந்நபர் இந்த காதல் உறவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இதனை அறிந்து கொண்ட பெண் அந்நபரின் மகளின் புகைப்படங்களை நிர்வாணப்படங்களாக தயாரித்து அந்நபரின் வட்ஸ்அப் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியுள்ளார்.

பாதிக்கப்பட்டவர் இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு வழங்கியதையடுத்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட பின்னர் ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version