ஆன்மீகம்

50 ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் நவபஞ்ச இராஜயோகம்; அதிர்ஷ்ட மழையில் நனையவுள்ள இராசிக்காரர்கள்

Published

on

குரு, சூரியன் மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்கள் 2024-ல் இரட்டை நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்குகின்றன.

இந்த இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது சுமார் 50 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கவுள்ளது.

இதனால் இதன் தாக்கம் அனைத்து இராசிகளிலுமே காணப்படும்.

குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், தொழிலில் நல்ல முன்னேற்றங்களையும் காணவுள்ளார்கள்.

அதோடு வெற்றி மேல் வெற்றியைப் பெறவுள்ளார்கள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது மங்களகரமானதாக இருக்கப் போகிறது.

முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவால் நிதி நிலையில் நல்ல முன்னற்றம் ஏற்படப் போகிறது.

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.

சிலர் ஜனவரி 14 ஆம் தேதிக்குள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சில நல்ல செய்திகளைப் பெறலாம்.

வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசையைக் கொண்டிருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படும்.

வேலை மற்றும் வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தொழில்நுட்பம், ஆசிரியர் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு இக்காலகட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஏற்கனவே நீங்கள் முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும்.

ஆனால் திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இரட்டை நவபஞ்ச ராஜயோகமானது அற்புதமான பலன்களை வழங்கும்.

அதுவும் நீண்ட நாட்களாக நீதிமன்ற வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், இக்காலத்தில் அதில் வெற்றி கிடைக்கும்.

வேலை மற்றும் வியாபாரத்திலும் நல்ல வெற்றியைப் பெறக்கூடும்.

பணிபுரிபவர்கள் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வைப் பெறலாம். சிலர் விரும்பிய இடமாற்றத்தைப் பெற வாய்ப்புள்ளது.

புதிய தொழிலை தொடங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.

நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வணிகர்களுக்கு நல்ல நிதி நன்மைகள் கிடைக்கும். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version