உள்ளூர்

2 வயது குழந்தையுடன் தற்கொலை செய்துக் கொண்ட இளம் தாய்!

Published

on

இரத்தினபுரி – கெஹெல்ஓவிடிகம பிரதேசத்தில் தொடர் குடியிருப்பு அறையொன்றிலிருந்து இளம் தாய் மற்றும் 2 வயது குழந்தையின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

2 வயதுடைய ஆண் குழந்தையும், சிவநாதன் வசந்தகுமாரி என்ற 21 வயதுடைய  இளம் தாயுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தாய் குழந்தையை கொன்று பின்னர் தானும் தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணை

இவரது கணவர் ஐந்து நாட்களுக்கு முன்னர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எலபத பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version