உள்ளூர்

மின் கட்டண உயர்வுக்கு எதிராக போராட்டம்!

Published

on

மட்டக்களப்பு மாவட்டத்தில் மின்சார கட்டணம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நெருக்கடிகளை முடிவுக்கு கொண்டுவருமாறு வலியுறுத்தி நேற்று மாலை தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தொகுதி அமைப்பாளர்களால் தீப்பந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

மின்கட்டண அதிகரிப்பை ஏற்படுத்தி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே, மின்கட்டணத்தை கூட்டாதே, ரணில் ராஜபக்ஷவை கண்டிக்கின்றோம் போன்ற கோசங்களும் போராட்டத்தின் போது எழுப்பப்பட்டன.

தேசிய மக்கள் சக்தியின் ஆசிரியர் சங்க அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் கட்சியின் உறுப்பினர்கள், கிராமமட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version