உள்ளூர்

திருகோணமலையில் கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!

Published

on

திருகோணமலை – முருகாபுரி பகுதியில்  10 610 கிலோ கிராம்  கேரள கஞ்சா    வைத்திருந்த  இருவர்  நேற்றைய தினம் (11.11.2023) கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படை பிரிவு அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின்  போது 38 வயதுடைய பெண் ஒருவரிடமிருந்து 6கிலோ 320 கிராம் கேரளா கஞ்சாவும், 43 வயதுடைய ஆண் ஒருவரிடமிருந்து 4கிலோ 290 கிராம் கேரளா கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை கஞ்சா கொண்டு செல்லப்படுவதற்காக பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருகோணமலை தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version