உள்ளூர்

மயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் 18 வயது இளைஞன் மரணம்.!

Published

on

கல்குடா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள சம்பவம் நேற்று (6) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அமைதி ஒழுங்கை வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த இராசமாணிக்கம் டிலோஷன் (18) என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

கடந்த (5) பாசிக்குடாவில் உள்ள உணகம் ஒன்றில் தனது வேலையை முடித்து விட்டு தனது வீட்டுக்கு கற்குடா பிரதான வீதியூடாக தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் போது குறித்த வீதியில் திடீரென சென்ற மயிலுடன் விபத்துக்குள்ளான நிலையில் படுகாயமடைந்து வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கு அமைவாக சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும் படி சட்ட வைத்திய அதிகாரியிடம் பரிந்துரைத்தார்.

விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது, மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version