உள்ளூர்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞன்; பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Published

on

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு பகுதியில் இளைஞன் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த இளைஞன் போதைப்பொருள் பாவனையினாலே ஏற்பட்ட உயர்குருதி அமுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளதாக உடற்கூற்றுப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நெடுந்தீவு மேற்குப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து அப் பகுதியைச் சேர்ந்த 25 வயதான குணாராசா தனுஷன் என்பவரது சடலம் நேற்றிரவு (31-10-2023) மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவரது அம்மம்மா வீட்டில் தங்கியிருந்து நேற்று அதிகாலை வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவரை மாலைவரை காணமையால் தேடியபோதே ஆட்களற்ற வீட்டில் இறந்து கிடந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டு பரிசோதனகள் மேற்கொள்ளப்பட்டதிலேயே இந்த தகவல் வெளியாகியானதாகத் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version