உள்ளூர்

கோர விபத்து; 20 வயது இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி!

Published

on

பொரளையில் வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் பாரவூர்தியின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் பொரளை – கொடகம பனாகொட வீதியில் இன்று சனிக்கிழமை (29) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபர்

ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 20 வயதுடைய இளைஞனே இந்த சம்பவத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞன் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version