உள்ளூர்

பெண் பொலிஸ் அதிகாரி இருவரை தகாத வார்த்தையில் பேசிய வர்த்தகருக்கு நேர்ந்த கதி!

Published

on

கண்டி –  அலவத்துகொட பொலிஸ் பிரிவில் கடமையாற்றும் பெண் பொலிஸ் அதிகாரிகள் இருவரை தகாத வார்த்தைகளால் திட்டிய வர்த்தகர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலவத்துகொட பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள கடைக்குச் சென்ற இரு பெண் பொலிஸ் அதிகாரிகள் ஐஸ்கிரீம் வாங்கியுள்ளனர்.

அதற்குத் தேவையான பணம் தங்களிடம் இருக்கவில்லை. போதாமல் இருக்கும் பணத்தை முதலாளி போட்டுக்கொள்வாரா என அவ்விருவரும் கேட்டுள்ளனர்.

அப்போது, ​​சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர், இரு பெண் பொலிஸ் அதிகாரிகளிடம் மறைமுகமான மொழியில் வாய்மொழியாக பாலியல் ரீதியாக பேசியுள்ளார்.

மிகவும் அசௌகரியத்திற்கு உள்ளான இரு பெண் பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் நிலையத்துக்குக் திரும்பி, சம்பவம் தொடர்பான குறிப்பை எழுதிவைத்துவிட்டு, அந்த வர்தகரைக் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து, அலவத்துகொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சுஜீவ குணதிலக்கவின் பணிப்புரையின் பிரகாரம் சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த ​பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version