உள்ளூர்

முல்லைத்தீவில் ஆர்ப்பாட்டம்!

Published

on

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வன்னிவிளான்குளம் மக்கள், தமது காணிகளுக்கான முதல்தர ஆவணத்தை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த போராட்டம் இன்று மாந்தை கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இடம்பெற்றது.

பாண்டியன்குளம் சந்தியிலிருந்து பேரணியாக புறப்பட்ட கிராம மக்கள் பிரதேச செயலக வாசலில் நின்றவாறு கோசங்களை எழுப்பினர்.

பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிகளின் உறுதி

கடந்த 2014ம் ஆண்டு மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தால் துவரங்குளம் வயல் காணிக்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை உறுதிப்படுத்தி தமக்கு வழங்குமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

58 விவசாயிகளுக்கு பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்ட காணிகளின் உறுதியை வழங்குமாறு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட பிரதேச மக்களால் உதவிப் பிரதேச செயலாளரிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.

இது தொடர்பில் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுசென்று பிரச்சினைக்கான தீர்வினை பெற்று தருவதாக கூறியதை அடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version