உள்ளூர்

திருகோணமலையில் பிரபல சைவ ஹோட்டல் சாப்பாட்டு பார்சலில் வாடிக்கையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Published

on

 திருகோணமலை நகரில் உள்ள பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வழங்கப்பட்ட சோற்றுப் பாசலில் மட்டத்தேள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பிரபலமான உயர்தர சைவஹோட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சோற்று பார்சல் ஒன்றினை கொள்வனவு செய்துள்ளார். இந்நிலையில் சாப்பிட பார்சலை பிரித்தவருக்கு அதில் மட்டத்தேள் இருந்தமையை கண்டு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளார்.

பெரும் அதிர்ச்சியடைந்த  வாடிக்கையாளர்

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் தொடர்ப்பு  பட்ட அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டதாக தெரியவருகின்றது.

உடனடியாக குறித்த பிரபல உயர்தர சைவஹோட்டலிற்கு விரைந்த பரிசோதகர்கள் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அதேவேளை திருகோணமலை நகரில் குறித்த சைவ ஹோட்டல் மிக பிரபலம் என கூறப்படும் நிலையில், இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் உணவுகளை சமைப்பது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் விசனங்களை வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version