உள்ளூர்

கிணற்றில் குழந்தைகளுடன் விழுந்த தாய்; பரிதாபமாக உயிரிழந்த 2 வயது சிறுமி!

Published

on

அனுராதபுரம், கொக்காவெவ தூதுவெவ பிரதேசத்தில் விவசாய கிணற்றில் விழுந்து 02 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

நேற்று (17) பிற்பகல், தாயும் அவரது சிறுமியும் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு  கலென்பிந்துனுவேவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு , சிறுமியின் தாய் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை உயிரிழப்பு

எனினும்  சம்பவத்தில் துடுவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 02 வயதும் 05 மாதமும் நிரம்பிய குழந்தையே உயிரிழந்துள்ளார்.

  துடுவெவ பிரதேசத்தில் உள்ள விவசாய கிணற்றில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மிதந்ததாகவும், 31 வயதான அவரது தாயார் கிணற்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்ட நிலையில் , இருவரையும் கரைக்கு அழைத்துச் சென்று வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சிறுமி உயிரிழந்த விதம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்காவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version