உள்ளூர்

யாழில் வீடொன்றில் யுவதிகளுடன் நான்கு பேர் கைது!

Published

on

யாழில் சமூக சீர்கேட்டில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் , இரு பெண்களையும் , நான்கு ஆண்களையும் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கைது நடவடிக்கை இன்று (9) இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

வீடொன்றில் சந்தேக நபர்கள் கைது

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து யாழ்ப்பாணம் ஐந்து சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதாகவும் அந்த  தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version