உள்ளூர்

உயர்தரப் பரீட்சை மாணவர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு!

Published

on

2023 ஆம் ஆண்டு கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் சிலர் நேற்றைய தினம் (21-09-2023) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடளித்துள்ளனர்.

எதிர்வரும் ஆண்டு (2024) பெப்ரவரி மாதம் வரையில் கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையை பிற்போட்டு தங்களது கற்றல் நடவடிக்கைக்கு போதுமான காலத்தை பெற்றுதருமாறு கோரி அவர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.

இதேவேளை, எதிர்வரும் நவம்பர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 2023ம் ஆண்டுக்கான க பொ த உயர்தரப் பரீட்சை, பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version