உள்ளூர்

தடுப்பூசியால் பல்கலை மாணவர் பலி; மறுக்கும் மருத்துவமனை!

Published

on

காலியில் தடுப்பூசிக்கு ஒவ்வாமையால் பல்கலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சம்பவத்தில் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலி – தவலம் ஹல்வித்திகல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய கசுன் திலார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை 

குறித்த மாணவன் கல்லீரலில் ஏற்பட்ட புற்று நோய் காரணமாக மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

அதற்கமைய, கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தனியாகச் சென்ற இளைஞனுக்கு அங்கு ஊசி போடப்பட்டதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

அந்த ஊசியையை பெற்றுக்கொண்ட 10 நிமிடங்களுக்குள் ஏற்பட்ட சிக்கல்களினால் மகன் உயிரிழந்ததாக அவரது உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த சம்பவத்தை மறுத்துள்ள மஹரகம வைத்தியசாலை ஊடகப் பேச்சாளர் , இவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version