உள்ளூர்

கிரிக்கெட் வீரர் சசித்ரவுக்கு விளக்கமறியல்!

Published

on

ஆட்ட நிர்ணய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் சசித்ர சேனநாயக்கவை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று வெள்ளிக்கிழமை (15) உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கை

சந்தேக நபருக்கு பிணை வழங்கினால் சாட்சிகளுக்கு செல்வாக்கு செலுத்த முடியும் என சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2020 லங்கா பிரிமியர் லீக் போட்டியில் தம்மிக்க பிரசாத் மற்றும் இளம் வீரர் தரிந்து ரத்நாயக்கவை ஆட்ட நிர்ணயம் செய்ய தூண்ட முயன்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version