உள்ளூர்

வீதிக்கு வந்த வட்டிச் சண்டையால் இருவர் காயம்; பெண்கள் உட்பட12 பேர் கைது!

Published

on

வீதிக்கு வந்த வட்டிச் சண்டையால் 12 பேர் நேற்று வியாழக்கிழமை (14) கைது செய்யப்பட்டதாக மொரட்டுவ  பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காலியில் இடம்பெற்ற நிலையில், காலி வீதியின் போக்குவரத்தைப் பாதிக்கும் வகையில் இடையூறை ஏற்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வட்டிப் பணப் பரிவர்த்தனை

கைதுசெய்யப்பட்டவர்களில் நான்கு பெண்களும் எட்டு ஆண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வட்டிப் பணப் பரிவர்த்தனையே தகராறுக்குக் காரணம் எனக் கூறிய பொலிஸார் இரு தரப்பிலும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் கூறினர்.

மேலும் உறவினர்களுக்கிடையில் இந்த முரண்பாடுகள் ஏற்பட்டதாக தெரிவித்த பொலிஸார், கைதானவர்கள் கொரலலவெல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version