இந்தியா

மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பம்!

Published

on

இந்தியாவில் மதுரைக்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவை ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ‘பட்ஜெட் கேரியர்’ ஸ்பைஸ்ஜெட் என்ற விமானமே இன்று (20) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பிக்கும் திட்டம்

கடந்த ஜூலை மாதம் ஸ்பைஸ்ஜெட் அதன் அதிகாரபூர்வ ஒன்லைன் முன்பதிவு முறையில் ஆகஸ்ட் 20 முதல் வாரந்தோறும் ஆறு முறை மதுரை – கொழும்பு விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியது.

இதன்படி பட்ஜெட் கேரியர் இந்தியாவின் மதுரை மற்றும் கொழும்பு கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு இடையே வாரத்தில் ஆறு நாட்கள் (புதன்கிழமை தவிர) விமான சேவைகளை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version