உள்ளூர்

லொறி மற்றொரு லொறியுடன் மோதி விபத்து!

Published

on

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் லொறியின் சாரதி காயமடைந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை – ஹொரவ்பொத்தான பிரதான வீதி மஹதிவுல்வெவ பிரதேசத்தில் இன்று (20)அதிகாலை இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதி காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம் பெற்ற விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் போது யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த லொறியின் சாரதியான எஸ். திலீபன் (38) என்பவர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

மேலும் இவ் விபத்து தொடர்பில் மொரவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version