உள்ளூர்

யாழில் புகையிரதம் முன்பாக பாய்ந்து இளம் குடும்பப் பெண் ஒருவர் பலி!

Published

on

யாழில் பெண்ணொருவர் புகையிரதத்தின் முன்பாக பாய்ந்து உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

யாப்பாணம், அரியாலை பகுதியிலேயே இவ்வாறு இளம் குடும்பப் பெண் உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புங்கன்குளம் புகையிரத நிலையத்தில் நேற்று (5) மதியம் 2.15 மணியளவில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த பெண்

அரியாலை, நெடுங்குளத்தை சேர்ந்த திலீபன் ஈழப்பிரியா (27) என்ற இளம் குடும்பப் பெண்ணே உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அவர் ஒன்றரை வயது பிள்ளையின் தாய் என தெரிய வந்துள்ளது. கணவனுக்கு அதிக கடன் தொல்லையென்றும், அவர் வெளிநாடு செல்வதற்காக டுபாயில் தங்கி நிற்பதாகவும், கடன்காரர்களின் தொல்லை தாங்க முடியாமல் இந்தப் பெண் தற்கொலை செய்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version