உள்ளூர்

மதுபோதையில் அட்டகாசம்; பிரபல பாடசாலை அதிபர் அதிரடியாக கைது!

Published

on

கல்கிஸையிலுள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் காவலாளியை தாக்கிய சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்குள்ளான காவலாளியான ஹொரணை, மேவனபலான பிரதேசத்தை சேர்ந்த 28 வயதான என்ற இளைஞராவார். காவலாளி தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மது அருந்திவிட்டு  தாக்குதல்

பாடசாலையில் மது அருந்திவிட்டு அதிபர் தாக்குதலை மேற்கொண்டதாக காயமடைந்த காவலாளி பொலிஸாருக்குத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேக நபரான அதிபர் உட்பட ஐவரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இலங்கையின் உறுதிப்படுத்தப்பட்ட உண்மைச் செய்தி வழங்குனரான நாழிகையுடன் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version