உள்ளூர்

மதுபான விற்பனையாளர்களினால் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்!

Published

on

எல்பிட்டிய பகுதியில் பொலிஸார் ஒருவர் சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களினால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.

அத்தோடு அப் பொலிஸ் உத்தியோகத்தர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கப்பட்ட உத்தியோகத்தர்

கடமை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே குறித்த போலிஸ் உத்தியோகத்தர் தாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத மதுபான விற்பனையாளர்களை கைது செய்தமை தொடர்பிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பிடிகல காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரபல்யமானவை

Exit mobile version